மும்பை தாக்குதல்: தீவிரவாதி ராணா மீது குற்றப்பத்திரிக்கை – முழு விவரம்
Sep 13, 2026, 01:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பை தாக்குதல்: தீவிரவாதி ராணா மீது குற்றப்பத்திரிக்கை – முழு விவரம்

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 26, 2023, 06:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவர்களில் ஒருவனான பாகிஸ்தானிய கனேடிய தொழில் அதிபர் தஹாவூர் ராணா மீது மும்பை காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2008 -ம் ஆண்டு நவம்பர் மாதம் 26, -ம் தேதி கடல் மார்க்கமாக இந்திய எல்லைக்குள் லஷ்கர் இ -தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் நுழைந்தனர்.

மீனவர்களைப் படுகொலை செய்துவிட்டு அவர்களின் படகில் மும்பைக்குள் ஊடுருவினர். அங்கிருந்து பல குழுக்களாகப் பிரிந்து, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், காமா மருத்துவமனை, தாஜ் ஹோட்டல், நரிமன் ஹவுஸ், லியோபோல்டு கபே, ஒபேராய் டிரைடெண்ட் என 10 -க்கும் மேற்பட்ட இடங்களில் துப்பாக்கிகளால் சுட்டும், வெடி குண்டுகளை வீசியும் தீவிரவாத செயல்களை அரங்கேற்றினர். இதனால், அந்த இடமே போர்க்களமாகக் காட்சியளித்தன.

இதனையடுத்து தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே தொடர்ந்து 2 நாட்கள் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த பயங்கர தாக்குதலில், இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா, ஜெர்மனி என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 175 அப்பாவி பொது மக்கள் கொலை செய்யப்பட்டனர். 300 -க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

மேலும், இந்தியத் தரப்பில், பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் ஹேமந்த் கர்கரே, ராணுவ உயர் அதிகாரி சந்தீப் உன்னிகிருஷ்ணன், மும்பை கூடுதல் போலீஸ் கமிஷனர் அசோக் காம்தே ஆகியோர் வீரமரணம் அடைந்தனர்.

முடிவில் தீவிரவாதிகள் 10 பேரில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் உயிருடன் பிடிபட்டான். வழக்கு விசாரணைக்கு பின்னர், இறுதியில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, 2012 நவம்பர் 21 -ம் தேதி அவனுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட பாகிஸ்தானிய கடியத் தொழில் அதிபர் தஹாவூர் ராணா மீது மும்பை குற்றப்பிரிவு காவல்துறை 405 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவன் டேவிட் ஹெட்லி. அவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, ராணாவுக்கு எதிராக வாக்குமூலமும் கொடுத்துள்ளான்.

அவனது வாக்குமூலத்தின்படி, ராணா, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மற்றும் லஸ்கர் இ – தொய்பா அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு முன்னர் ராணா மும்பையில் பிரபல ஹோட்டலில் சுமார் 10 நாட்கள் ரூம் போட்டுத் தங்கியதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவங்கள் அனைத்தும் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளது.

பத்திரிக்கையாளர் கொலை வழக்கு ஒன்றில் அமெரிக்கச் சிறையில் ராணா தற்போது உள்ளார்.

இந்த வருடம் மே மாதம் ராணாவை, இந்தியாவுக்கு நாடு கடத்த, அமெரிக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால், ராணா தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என தேசபற்றாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Tags: Tahawwur RanaUnlawful Activities (Prevention) Act (UAPA)
Share
Tweet
SendShare
Previous Post

அக்டோபர் 7-ம் தேதி 52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

Next Post

4 நாட்களாகக் காவிரியில் 5,000 கன அடி நீர் திறப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies