போதைப் பொருள் வழக்கு: காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது!
Apr 29, 2026, 09:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போதைப் பொருள் வழக்கு: காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 28, 2023, 03:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சுக்பால் சிங், போதைப் பொருள் மற்றஉம் மனநோய் பொருட்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருப்பவர் சுக்பால் சிங் கைரா. இவர், அம்மாநிலத்தின் போலாத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். சுக்பால் சிங், கடந்த 2014-ம் ஆண்டு இறுதியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.

இதையடுத்து, சுக்பால் சிங் கைரா மீது கடந்த 2015-ம் ஆண்டு ஜலாலாபத் காவல்நிலையத்தில் போதைப்பொருள் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கில், சுக்பால் சிங் உட்பட 9 பேருக்கு போதைப்பொருள் மருந்துகள் மற்றும் மனநோய் பொருட்கள் சட்டத்தின் கீழ் பஞ்சாப் நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கியது. எனினும், இந்த உத்தரவை எதிர்த்து சுக்பால் சிங் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சுக்பால் சிங்குக்கு எதிரான விசாரணையை நிறுத்தி வைக்கும்படி கடந்த 2017-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த சமயத்தில் அவர் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். எனினும், தன் மீதான வழக்குக்குப் பின்னணியில் ஆம் ஆத்மி கட்சியினரின் சதி இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த சூழலில், 2018-ம் ஆண்டு சுக்பால் சிங் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, புதிய கட்சி தொடங்கிய சுக்பால் சிங் கைரா, கடந்த 2021-ம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில், போதைப்பொருள் மருந்துகள் மற்றும் மனநோய் பொருட்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பழைய வழக்கு தொடர்பாக சுக்பால் சிங் கைராவின் வீட்டில் இன்று காலை காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதை சுக்பால் சிங் முகநூல் பக்கத்தில் லைவ் காணொளியாக வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து சுக்பால் சிங்கை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை கண்டித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜாவார்ரிங் தனது எக்ஸ் பக்கத்தில் ஆம் ஆத்மி அரசை கடுமையாக தாக்கி இருக்கிறார். “சுக்பால் சிங்கின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இது எதிர்க்கட்சிகளை மிரட்டும் முயற்சி. மேலும், முக்கிய பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்ப ஆம் ஆத்மி அரசின் தந்திர நடவடிக்கையாகும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Tags: ArrestCongressMLApunjab
ShareTweetSendShare
Previous Post

நிலநடுக்க எச்சரிக்கை சேவை: இந்தியாவில் அறிமுகம்!

Next Post

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies