இந்தியத் தூதருக்கு அனுமதி மறுப்பு: குருத்வாரா கடும் கண்டனம்!
Sep 12, 2026, 11:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியத் தூதருக்கு அனுமதி மறுப்பு: குருத்வாரா கடும் கண்டனம்!

காலிஸ்தான் தீவிரவாதிகள் திருப்பி அனுப்பிய விவகாரம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 1, 2023, 01:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஸ்காட்லாந்திலுள்ள சீக்கிய குருத்வாராவுக்குச் சென்ற இந்திய தூதர் விக்ரம் துரைசாமி திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்துக்கு, குருத்வாரா நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தில் உள்ள சீக்கிய குருத்வாரா நிர்வாகத்துடனான சந்திப்புக்காகச் சென்றார். இதையறிந்த காலிஸ்தான் தீவிரவாதிகள் சிலர், இந்தியத் தூதரை குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பினர். இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தனர்.

இச்சம்பவத்துக்கு இங்கிலாந்தின் இந்தோ-பசிபிக் பகுதிக்கான அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யன், கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்ததோடு, நாட்டிலுள்ள வழிபாட்டுத் தலங்கள் அனைவருக்காவும் திறந்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதேபோல, இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில், சம்பவம் நிகழ்ந்த ஸ்காட்லாந்தின் கிளாஸ்கவ் குருத்வாரா நிர்வாகம், இச்சம்பவத்துக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து கிளாஸ்கவ் குருத்வாரா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “குருத்வாராவில் நடைபெறவிருந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமி வருகை தந்திருந்தார். ஆனால், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அவரை குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பி இருக்கிறது.

இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.  குருத்வாராவைப் பொறுத்தவரை அனைத்து மதத்தினருக்காகவும் திறந்திருக்கும். யார் வேண்டுமானாலும் வந்து தரிசனம் செய்து விட்டுச் செல்லலாம்.

சீக்கிய வழிபாட்டுத் தலத்தின் அமைதியான நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில், ஒழுங்கீனமான நடவடிக்கைக் கையாண்ட மர்ம நபர்கள் மீது ஸ்காட்லாந்து காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறது.

 

Tags: englandindian envoyGurudwara
Share
Tweet
SendShare
Previous Post

திமிங்கலத்தின் உமிழ் நீரான ஆம்பர்கிரீஸ் : கடல் தங்கம்!

Next Post

தமிழக அரசுக்கு வி.ஹெச்.பி. எச்சரிக்கை !!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies