சுருளி அருவி: சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை!
Sep 13, 2026, 02:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுருளி அருவி: சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை!

Murugesan M by Murugesan M
Oct 5, 2023, 03:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவி பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் குளிப்பதற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுருளி அருவிக்குச் செல்லும் சாலையில் யானைகள் நடமாட்டம் இருந்தது. இதனால், அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அருவிப் பகுதியில் கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை மாவட்ட நிர்வாகம் சார்பில் சாரல் திருவிழா நடத்தப்பட்டது. இதன் காரணமாக, அருவிப் பகுதியிலிருந்த யானைகளை வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர். மாவட்ட நிர்வாகத்தின் இந்த செயலால், வன விலங்கு ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில், நேற்று யானைக் கூட்டங்கள் சுருளி அருவிப் பகுதிக்கு வந்தது. தற்போது ஆறு யானைகள் வனத்துறை சோதனைச் சாவடி பகுதியில் முகாமிட்டுள்ளன. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள், சுருளி அருவிக்குச் செல்லும் நுழைவு வாயிலை மூடினார். அப்போது, அருவிகளில் குளிக்க ஆர்வத்துடன் வந்த சுற்றுலாப் பயணிகளை, வனத்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். இதனால், ஆர்வத்துடன் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லும் வரை சுற்றுலாப் பயணிகள் சுருளி அருவிக்குச் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறியதாவது, சுருளி அருவிக்குச் செல்லும் வனப்பகுதியில் யானைகள் இருப்பதால், சுருளி அருவிக்குச் செல்லவோ, குளிக்கவோ சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி கிடையாது. யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்ற பிறகுதான் அருவியில் குளிக்கச் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags: tnTourists are prohibited!
Share
Tweet
SendShare
Previous Post

ரூ.10 லட்சம் சிக்கலில் நடிகர் அமிதாப்பச்சன் – நடந்தது என்ன?

Next Post

மகாராஷ்டிராவில் தீ விபத்து 25 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies