மயிலாடுதுறை: நாட்டு வெடி ஆலையில் பயங்கர விபத்து - 4 பேர் உடல் சிதறி பலி!
Jul 29, 2026, 02:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மயிலாடுதுறை: நாட்டு வெடி ஆலையில் பயங்கர விபத்து – 4 பேர் உடல் சிதறி பலி!

Murugesan M by Murugesan M
Oct 5, 2023, 06:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் நாட்டு வெடிகள் தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அடுத்த தில்லையாடி காளியம்மன் கோவில் தெரு உள்ளது. இங்கு, அந்த பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவருக்குச் சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் குடோன் உள்ளது.

தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 7 தொழிலாளர்கள் அங்கு நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று நாட்டு வெடி பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில், வெடி தயாரிப்பு பணியில் ஈட்டுப்பட்டிருந்த மதன், நிக்கேஷ், ராகவன் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் ஆகிய 4 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

உடலின் பாகங்களை அடையாளம் காண முடியாதபடி பல்வேறு இடங்களில் சிதறிகிடந்தன. இதன் காரணமாக அப்பகுதியில் அருகிலிருந்த வீடுகள் குலுங்கின. புகைமூட்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக, பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர்.

மேலும், மணிவண்ணன், பக்கிரிசாமி, மாரியப்பன், மாசிலாமணி ஆகியோர் படுகாயங்களுடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், யாராவது இடிபாடுகளில் சிக்கி உள்ளனரா என்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.

வெடி விபத்து தொடர்பாக, நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஸ்சிங் நேரில் விசாரணை மேற்கொண்டார். மேலும், இந்த வெடி விபத்து குறித்து பொறையார் காவல்துறையினர் சம்பவ இடத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வெடி தயாரிப்பு நிறுவன உரிமையாளர் மோகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Tags: Terrible accident
ShareTweetSendShare
Previous Post

நியூஸ் கிளிக்கின் சதி: புட்டுப்புட்டு வைத்த டெல்லி காவல்துறை!

Next Post

53 கிலோ எடை பிரிவில் வெண்கலம் வென்ற இளம் வீராங்கனை !

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies