சுதந்திர தின உரையில் அறிவித்த திட்டங்கள்: பிரதமர் மோடி ஆய்வு!
Jul 31, 2026, 01:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுதந்திர தின உரையில் அறிவித்த திட்டங்கள்: பிரதமர் மோடி ஆய்வு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 7, 2023, 06:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின உரையில் அறிவித்த திட்டங்களின் நிலை குறித்தும், அதை செயல்படுத்துவது குறித்தும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று செங்கோட்டையில் ஆய்வு செய்தார்.

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து உரையாற்றும் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு பல புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் ஆற்றிய உரையில், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு மலிவு விலையில் கடன் வழங்குவதை உறுதி செய்வதாகக் குறிப்பிட்டார். அதேபோல, நகரங்களில் வாடகை வீடுகளில் வசிக்கும் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், புதிய திட்டத்தை அரசு கொண்டு வருவதாகவும் பிரதமர் அறிவித்திருந்தார். மேலும், வீடுகளுக்கு சூரிய ஒளி மின்சாரத்தை உறுதி செய்வது குறித்தும் பிரதமர் குறிப்பிட்டார்.

பிரதமரின் உரையில், “நகரங்களில் வசிக்கும் நலிவடைந்த பிரிவினர் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். நடுத்தரக் குடும்பங்களுக்கு சொந்த வீடு வாங்குவது என்பது மிகப்பெரும் கனவாக இருந்து வருகிறது. ஆகவே, இதுபோன்ற நடுத்தரக் குடும்பங்களுக்கு பயனளிக்கும் புதிய திட்டத்தை வரும் ஆண்டுகளில் கொண்டு வருவோம். வாடகை வீடுகள், குடிசைப் பகுதிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிப்பவர்கள் சொந்தமாக வீடு கட்ட விரும்பினால், அவர்களுக்கு வட்டி விகிதத்தில் நிவாரணம் மற்றும் பல லட்சம் ரூபாய் சேமிக்க உதவும் வங்கிகளில் கடன் வழங்குவோம்.

கொரோனா வைரஸ் காலத்தில், நாட்டை முன்னோக்கிச் செலுத்திய விதத்தில் நமது திறன்களை உலகமே கண்டது. உலகின் விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்தபோது, ​​பெரிய பொருளாதாரங்கள் மீது அழுத்தம் இருந்த நேரத்தில் கூட, உலகம் வளர்ச்சியைக் காணும் என்று நாங்கள் கூறினோம். அந்த வளர்ச்சி மனிதனை மையப்படுத்தியதாகவும், மனிதாபிமானதாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வைக் காண முடியும். மேலும், மனித உணர்வுகளை விட்டு நம்மால் நல்வாழ்வை வாழ முடியாது என்பதை கோவிட் நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், சுதந்திர தினத்தன்று அறித்த திட்டங்கள் நிலை குறித்தும், அத்திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் பிரதமர் மோடி இன்று செங்கோட்டையில் ஆய்வு செய்தார். அப்போது, திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் மோடி கூறுகையில், “இன்று இந்தியா உலகளாவிய தெற்கின் குரலாக மாறி வருகிறது. உலகப் பொருளாதாரம் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியா தனக்கென ஒரு இடத்தை சம்பாதித்திருக்கிறது. இந்தியாவின் தற்போதைய சூழ்நிலை உலகில் ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதம் என்பதை நம்பிக்கையுடன் கூற முடியும். எங்கள் மனதிலோ அல்லது எனது 140 கோடி குடும்ப உறுப்பினர்களின் மனதிலோ அல்லது உலகின் மனதிலோ இனிமேல் ‘ஆனால்’ அல்லது ‘என்றால்’ என்பது இல்லை. முடியும் என்கிற முழு நம்பிக்கை உள்ளது” என்று கூறியிருக்கிறார்.

Tags: PM ModiSengaottaiReview meeting
ShareTweetSendShare
Previous Post

இன்று வருமானவரி துறை -நாளை அமலாக்கத்துறை ! திமுக பீதி !

Next Post

பிரபல யூடியூபர் டி.டி.எஃப். வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies