உலகக்கோப்பை கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி !
Sep 12, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி !

Murugesan M by Murugesan M
Oct 13, 2023, 11:12 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா.

ஒரு நாள் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் லக்னோவில் விளையாடி வருகிறது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் தலைவர் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன் படி முதலில் தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது.

இதில் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் மற்றும் தேம்பா பாவுமா ஆகியோர் களமிறங்கினர். இதில் குயின்டன் டி காக் சதம் விளாசி மொத்தமாக 106 பந்துகளில் 109 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

தேம்பா பாவுமா 55 பந்துகளில் 35 ரன்களுடனும், ராஸ்ஸி வான் டெர் டுசென் 30 பந்துகளில் 26 ரன்களுடனும் ஆட்டமிழக்க அடுத்ததாக களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரங்களில் ஆட்டமிழக்க 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விசிக்கெட்கள் இழப்பிற்கு 311 ரன்களை எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்சமாக கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் ஸ்டார்க் தலா 2 விக்கெட்களும், ஜோஷ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் மற்றும் ஆடம் ஜம்பா ஆகியோர் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்கள் மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர்.

இதில் 5 வது ஓவரில் மிட்செல் மார்ஷ் 7 ரன்களுக்கும், 6 வது ஓவரில் டேவிட் வார்னர் 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்பு அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க மார்னஸ் லாபுசாக்னே மட்டும் 46 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் ஆஸ்திரேலியா அணி 40 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 177 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.

இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 109 ரன்களை அடித்த தென் ஆப்பிரிக்கா வீரர் குயின்டன் டி காக்வுக்கு வழங்கப்பட்டது.

Tags: australia vs south affricaicc world cup cricket
Share
Tweet
SendShare
Previous Post

ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Next Post

ஆவின் இனிப்புகள்: மூடி இல்லாமல் விற்பனை!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies