இது வெறும் ஆரம்பம்தான்: இஸ்ரேல் பிரதமர் அதிரடி!
Aug 5, 2026, 09:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இது வெறும் ஆரம்பம்தான்: இஸ்ரேல் பிரதமர் அதிரடி!

ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக அழிப்போம் என சூளுரை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 14, 2023, 02:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்திருக்கும் நிலையில், இது வெறும் ஆரம்பம்தான். ஹமாஸ் தீவிரவாதிகளை முற்றிலுமாக அழிப்போம் என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்திருக்கிறார்.

இஸ்ரேல் மீது காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் காலை திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்தில் 7,000 ஏவுகணைகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டதால், இஸ்ரேல் திக்குமுக்காடிப் போனது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஹமாஸ் தீவிரவாதிகள், வான், கடல், தரை மார்க்கமாக இஸ்ரேலுக்குள் ஊடுருவினர். பின்னர், கண்ணில் பட்ட இஸ்ரேலியர்களை ஈவு இரக்கமின்றி குருவியைச் சுடுவதுபோல சுட்டுக் கொன்றனர்.

இத்தாக்குதலில் சுமார் 1,300 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதோடு, 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் இருக்கிறார்கள். மேலும், இஸ்ரேலிய பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியதோடு, முதியோர் மற்றும் சிறுவர், சிறுமிகளை சித்ரவதை செய்தனர். இது தவிர, 150-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாகவும் பிடித்து வைத்திருக்கிறார்கள். எனினும், சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல் கடுமையான பதிலடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

முதலில் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வந்த இஸ்ரேல், நேற்று முதல் தரைப்படை மூலமும் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது. இந்த சூழலில், தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, “இது வெறும் ஆரம்பம்தான். இந்தப் போரை இதுவரை இல்லாத அளவுக்கு வலிமையாக முடிப்போம். நாங்கள் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிப்போம். இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பரந்த சர்வதேச அளவிலான ஆதரவு இருக்கிறது.

நமது எதிரிகள் இப்போதுதான் விலை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். என்ன நடக்கும் என்பதை என்னால் வெளிப்படையாகக் கூற முடியாது. ஆனால், இது வெறும் ஆரம்பம் மட்டுமே என்று நான் சொல்லிக் கொள்கிறேன். எங்களுக்கு நடந்த கொடுமையை நாங்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டோம். யூத மக்களுக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடூரங்களை ஒருபோதும் மறக்கவும் மாட்டோம். அளவற்ற சக்தியைக் கொண்டு எங்கள் எதிரிகளை எதிர்த்துப் போராடுவோம்” என்று கூறியிருக்கிறார்.

Tags: IsraelPM Netenyahu
ShareTweetSendShare
Previous Post

அரசு அதிகாரியைக் கொலை செய்ய முயன்ற திமுகவினர் – நடந்தது என்ன?

Next Post

பிரதமர் மோடி எழுதிய “கர்பா” பாடல்: இசை வீடியோ வெளியீடு!

Related News

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது – தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மரிய வில்சன்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies