இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் விமானப்படைத் தலைவர் "அவுட்"!
Apr 29, 2026, 09:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் விமானப்படைத் தலைவர் “அவுட்”!

இஸ்ரேல் இராணுவம் உறுதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 14, 2023, 06:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் விமானப்படைத் தலைவர் முராத் அபு முராத் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் விமானப்படை தெரிவித்திருக்கிறது. மேலும், தங்களது எச்சரிக்கையைத் தொடர்ந்து காஸா நகர மக்கள் தெற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும் கூறியிருக்கிறது.

இஸ்ரேல் மீது காஸா நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். முதலில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இஸ்ரேல் இராணுவத்தை நிலைகுலையச் செய்த தீவிரவாதிகள், பின்னர் வான், கடல், தரை மார்க்கமாக ஊடுருவி நேரடித் தாக்குதலிலும் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் 1,300 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஹமாஸ் தீவிரவாதிகள் கண்ணில் படும் இஸ்ரேலியர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்வதோடு, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும், சிறுவர்களின் தலையை துண்டித்தும் வெறியாட்டம் ஆடி வருகின்றனர். இதற்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. ஏராளமான விமானங்களை அனுப்பி அசுரத் தனமான வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது. இதனால், காஸா நகரமே இருளில் மூழ்கிக் கிடக்கிறது.

ஏற்கெனவே காஸாவில் இருந்த ஹமாஸ் தலைமையகத்தையும், மசூதியின் மையப் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்களையும் அழித்த இஸ்ரேல் விமானப்படை, முக்கியத் தீவிரவாதத் தலைவரின் வீட்டையும் அழித்தது. இந்த சூழலில்தான், காஸா பகுதியில் ஹமாஸ் வான்வழித் தாக்குதல் நடவடிக்கைகளை நிர்வகிக்கும் தலைமையகத்தைக் குறிவைத்துத் தாக்கியது. இதில், விமானப்படைத் தலைவர் முராத் அபு முராத் கொல்லப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து இஸ்ரேல் விமானப்படை வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “இஸ்ரேல் விமானப்படையின் போர் விமானங்கள் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் செயல்பாட்டு தலைமையகத்தைத் தாக்கின. இத்தாக்குதலின்போது, தீவிரவாதிகளை இயக்கிய காஸா நகரத்தின் விமானப்படைத் தலைவர் முராத் அபு முராத் கொல்லப்பட்டார். மேலும், ஒரே இரவில் நடத்தப்பட்ட தனித்தனி தாக்குதல்களில் இஸ்ரேல் ஊடுருவலுக்குத் தலைமை தாங்கிய ஹமாஸின் கமாண்டோ படைகளுக்குச் சொந்தமான டஜன் கணக்கான தளங்களையும் இஸ்ரேல் விமானப்படை தாக்கி அழித்தது” என்று தெரிவித்திருக்கிறது.

இஸ்ரேல் மற்றும் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஜொனாதன் கான்ரிகஸ் மற்றொரு பதவில், “காஸா பகுதி மக்கள் இஸ்ரேலின் எச்சரிக்கையைக் கேட்டு சரியானதைச் செய்கிறார்கள். பாலஸ்தீனிய குடிமக்கள் தெற்கே நகர்வைக் கண்டோம். மக்கள் எங்களின் எச்சரிக்கைக்கு செவிசாய்ப்பதையும், அவர்கள் புத்திசாலித்தனமான செயலைச் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், “பொதுமக்கள் எங்கள் எதிரிகள் அல்ல. நாங்கள் அவர்களை கொல்லவோ, காயப்படுத்தவோ முயற்சிக்கவில்லை. அவர்கள் போரினால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக வடக்குப் பகுதியை விட்டு தெற்குப் பகுதிக்கு இடம்பெயரும்படி எச்சரிக்கை விடுத்தோம். எங்களது இலக்கு ஹமாஸ் மற்றும் அதன் உள்கட்டமைப்பை முற்றிலுமாக அழிப்பதே. நாங்கள் ஹமாஸ் மற்றும் அதன் இராணுவத் திறன்களை சிதைத்து அடிப்படை நிலையை மாற்றுவோம். இதனால் ஹமாஸ் தீவிரவாதிகள் மீண்டும் ஒருபோதும் இஸ்ரேல் மீதும், பொதுமக்கள் அல்லது வீரர்கள் மீதும் எந்த தாக்குதலையும் நடத்த முடியாது” என்றார்.

Tags: killedisraeli defence forcesairstrikehamass head
ShareTweetSendShare
Previous Post

நீதி மன்றங்களிலும் ஆடை கட்டுப்பாடு – முழு விவரம்

Next Post

அல்கொய்தாவை விட கொடூரமானவர்கள் ஹமாஸ் தீவிரவாதிகள்!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies