அல்கொய்தாவை விட கொடூரமானவர்கள் ஹமாஸ் தீவிரவாதிகள்!
Sep 13, 2026, 03:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அல்கொய்தாவை விட கொடூரமானவர்கள் ஹமாஸ் தீவிரவாதிகள்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காட்டம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 14, 2023, 06:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவரும் ஹமாஸ் தீவிரவாதிகள், அந்நாட்டுப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும், சிறுவர் சிறுமிகளின் தலையைக் கொய்தும் வெறியாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அல்கொய்தாவை விட கொடூரமானவர்கள் ஹமாஸ் தீவிரவாதிகள் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.

காஸா நகரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த 7-ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். முதலில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவியவர்கள், நேரடித் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இத்தாக்குதலின்போது கண்ணில் பட்ட இஸ்ரேலியர்களை எல்லாம் கொன்று குவிப்பதோடு, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

மேலும், ஆண்கள், முதியவர்கள், சிறுவர், சிறுமிகளை சித்ரவதை செய்வதோடு, அவர்களின் தலையைக் கொய்தும் கொடூர செயல்களை அரங்கேற்றி வருகின்றனர். மேலும், சிறுவர், சிறுமியர் உட்பட 150-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து சித்ரவதை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஹமாஸ் தீவிரவாதிகளின் இந்த வெறியாட்டத்தில் 27 அமெரிக்கர்கள் உட்பட 1,300-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகளை முற்றிலுமாக அழிக்கப் போவதாகக் கூறி, அத்தீவிரவாதிகளை பாலஸ்தீனம் முழுவதும் தேடித் தேடி இஸ்ரேல் இராணுவத்தினர் வேட்டையாடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவுக்கரம் நீட்டி இருக்கின்றன. அமெரிக்கா ஒரு படி மேலே போய், தனது நாசக்கார போர்க் கப்பலை இஸ்ரேல் கடற்பகுதியில் நிறுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், பென்சில்வேனியா மாநிலம் பிலடெல்பியாவில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “இஸ்ரேல் மீதான ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்த முழு விவரங்களை கேட்கக் கேட்க, அல்கொய்தாவை விட ஹமாஸ் பயங்கரமான அமைப்பு என்பதில் சந்தேகமே இல்லை. நாங்கள் இஸ்ரேலுடன் துணை நிற்கிறோம் என்பதிலும் சந்தேகமே வேண்டாம். அமெரிக்க உள்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் இராணுவச் செயலர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் இஸ்ரேலுக்கு நேரில் சென்றனர்.

பதில் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்க தயாராக இருக்கிறது. பாலஸ்தீனத்தின் பெரும் பகுதி மக்கள் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதை மறுக்க முடியாது. இப்போரில் காணாமல் போயிருக்கும் அமெரிக்கர்களின் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டு நான் ஆறுதல் கூறிவருகிறேன். மேலும், அவர்களை மீட்க அமெரிக்கா அனைத்தை முயற்சிகளையும் செய்ய உள்ளது என்று நம்பிக்கை தெரிவித்தேன்” என்று கூறியிருக்கிறார்.

Tags: Jo bidenHamas TerroristAl qaeda
Share
Tweet
SendShare
Previous Post

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் விமானப்படைத் தலைவர் “அவுட்”!

Next Post

அக்டோபர் 16-ம் தேதி அமித்ஷா கொல்கத்தா பயணம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies