இலங்கை அணியின் கேப்டன் உலகக்கோப்பையில் இருந்து நீக்கம் - காரணம் என்ன ?
Apr 29, 2026, 01:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கை அணியின் கேப்டன் உலகக்கோப்பையில் இருந்து நீக்கம் – காரணம் என்ன ?

Murugesan M by Murugesan M
Oct 15, 2023, 01:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை கிரிக்கெட் அணியின்கேப்டன் தசுன் ஷனகா அணியில் இருந்தே நீக்கப்பட்டார். காயம் காரணமாக அவர் நீக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகி உள்ளது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் 12 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா அணியில் இருந்து நீக்க பட்டதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

கேப்டன் தசுன் ஷனகாவிற்கு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது தொடையில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் உலகக்கோப்பை தொடரை நடத்தும் ஐசிசி-யின் டெக்னிகல் கமிட்டி அனுமதியுடன் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

எனினும், இது காயம் மட்டும் தானா? அல்லது கேப்டனாகவும், தனிப்பட்ட முறையில் அவர் ஃபார்மில் இல்லாததாலும் தான் அணியில் இருந்து நீக்கப்பட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தசுன் ஷனகா மிக மோசமாக இருந்த இலங்கை அணியை ஓரளவு பெயர் சொல்லும் அணியாக மாற்றி இருந்தார். ஆனாலும், பெரிய அணிகளை வீழ்த்தும் வலிமை அந்த அணியிடம் இல்லை.

கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டி வரை முன்னேறினாலும், இலங்கை அணி வெறும் 50 ரன்கள் எடுத்து ஆல் – அவுட்டாகி பெரும் ஏமாற்றம் அளித்தது. அதன் பின் உலகக்கோப்பை தொடருக்கான அணி அறிவிக்கப்படும் முன் ஷனகா கேப்டன் பதவியில் இருந்து தானே விலகப் போவதாக செய்திகள் வெளியானது.

ஆனால், கடைசி நிமிடத்தில் ஷனகா தலைமையில் இலங்கை அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்தது. ஆனால், தற்போது இலங்கை அணி உலகக்கோப்பை தொடரில் தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்த நிலையில், ஷனகா காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.

அவர் காயம் குணமாக மூன்று வாரங்கள் ஆகும் என்பதால் நீக்கப்பட்டதாக கூறி இருக்கிறது. இலங்கை கிரிக்கெட் நிர்வாகம். தற்போது இலங்கை அணியின் கேப்டனாக குசால் மென்டிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவர் நீண்ட காலமாக அணியின் துணை கேப்டனாக இருந்து வருகிறார். நல்ல ஃபார்மிலும் இருக்கிறார். அதன் காரணமாக அவரை கேப்டானாக்கி இருக்கிறார்கள்.

Tags: srilanka cricketsrilanka captain
ShareTweetSendShare
Previous Post

சத்ரபதி சம்பாஜிநகரில் விபத்து- உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

Next Post

2 நாள் பயணம்: குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை!

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies