மேல் மருவத்தூர் அம்மா, சாமானியர்களின் சாமி : யார் இந்த பங்காரு அடிகளார் ?
Sep 12, 2026, 05:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேல் மருவத்தூர் அம்மா, சாமானியர்களின் சாமி : யார் இந்த பங்காரு அடிகளார் ?

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 20, 2023, 12:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேல் மருவத்தூர் அம்மா, அடிகளார், சாமானியர்களின் சாமி இப்படி பல பெயர்களால் அழைக்கப்படும் பங்காரு அடிகளார் வாழ்க்கை வரலாறு குறித்து பார்க்கலாம்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மேல் மருவத்தூர் கிராமத்தில் 1941ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதி கோபால நாயக்கர் – மீனாம்பாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார் பங்காரு அடிகளார். இவரது இயற்பெயர் சுப்பிரமணி.
1968ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி லட்சுமி என்பவரை பங்காரு அடிகளார் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்பழகன், செந்தில் குமார், ஸ்ரீதேவி, உமாதேவி ஆகிய நான்கு குழந்தைகள் பிறந்தன.

பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த பங்காரு அடிகளார் வாழ்க்கை ஆன்மீகத்தை நோக்கி திரும்பியது. 1966ஆம் ஆண்டு ஒருநாள் பங்காரு அடிகளாரின் குடும்பத்தில் நடந்த விழா ஒன்றில் பங்காரு அடிகளாரை ஆதி பராசக்தி ஆட்கொண்டதாகவும், தீப ஆராதனை தட்டு ஒன்றை வளைத்து தனது சக்தியை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட அவர், அருள்வாக்கு சொல்ல தொடங்கினார். அவர் அளித்த அருள்வாக்கு அனைத்தும் பலிக்க தொடங்கியது. இதனால் பக்தர்களின் கூட்டமும் அதிகரிக்கத் தொடங்கியது. இதனையடுத்து ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தை தொடங்கினார். இதன் காரணமாக அவர் தமிழ்நாட்டில் பிரபலம் அடைந்தார்.

1980ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு முழுவதும் அவரின் வழிபாட்டு மன்றங்கள் முளைத்தன. இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளில் சுமார் 7000க்கும் அதிகமான வழிபாட்டு மன்றங்கள் உள்ளது.

உலகில் உள்ள எந்த இந்து கோயில்களிலும் மாதவிடாய் காலங்களில் பெண்களை அனுமதிப்பதில்லை. மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோயிலுக்கு வந்தால் தீட்டு என்பது ஐதீகமாக இருந்தது. ஆனால் இந்த ஐதீகங்களை பங்காரு அடிகளார் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்கள் கருவறை வரை சென்று பூஜை செய்யலாம் என்றும், மாதவிடாய் காலத்திலும் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்யலாம் என்ற வழிமுறைகளை அறிமுகம் செய்யப்பட்டதால் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்தனர்.

சபரிமலை பழனி முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு மாலை போட்டுச் செல்வது போல, ஆதிபராசக்தி கோவிலுக்கும் பல கிராமங்களில் இருந்தும் பெண்கள் கூட்டமாக சென்றனர்.
அறக்கட்டளை மூலமாக, மேல் மருவத்தூர் பகுதியில் ஏராளமான கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், கடைகள் இவரின் கீழ் தொடங்கப்பட்டன. 2019இல் இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது. இந்நிலையில் வயது முதிர்வு, உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பங்காரு அடிகளார் நேற்று மாலை காலமானார்.

Tags: Bangaru AdikalarDeath of Bangaru Adikalar
Share
Tweet
SendShare
Previous Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 46.67 அடியாக அதிகரிப்பு!

Next Post

ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் வந்தே பாரத் இரயில் சேவை!

Related News

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies