எகிப்தைத் தாக்கிய குண்டு: வருத்தம் தெரிவித்த இஸ்ரேல்!
Apr 29, 2026, 10:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எகிப்தைத் தாக்கிய குண்டு: வருத்தம் தெரிவித்த இஸ்ரேல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 23, 2023, 07:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாத முகாம்களை நோக்கி இஸ்ரேல் நாட்டின் பீரங்கி எய்த குண்டு, தவறுதலாக எகிப்து நாட்டின் எல்லையைத் தாக்கி இருக்கிறது. இதற்கு, இஸ்ரேல் இராணுவம் வருத்தம் தெரிவித்திருக்கிறது.

பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவரவாதிகள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் நிலைகுலைந்த இஸ்ரேல் தற்போது கடுமையான எதிர்தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் 1,400 பேரும், இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் 4,500 பேரும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளை வேரோடு அழிக்காமல் விடமாட்டோம் என்று இஸ்ரேல் சபதம் செய்திருக்கிறது. எனவே, 17-வது நாளாக இன்றும் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலில்தான், காஸா நகரை நோக்கி வீடப்பட்ட இஸ்ரேல் நாட்டின் பீரங்கி குண்டுகள் தவறுதலாக எகிப்து நாட்டைத் தாக்கி இருக்கிறது.

அதாவது, இஸ்ரேல் – எகிப்து எல்லைப் பகுதியான கேரேம் ஷலோம் பகுதியில்தான் ஹமாஸ் படைக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆகவே, காஸா நகருக்கு பதிலாக எகிப்து பக்கம் வீசிவிட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், உலகின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் சுமார் 12 சதவீதம் சூயஸ் கால்வாய் வழியாகத்தான் நடக்கிறது.

எனவே, இந்தச் சண்டையில் சூயஸ் கால்வாய் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டால், அது சர்வதேச அளவில் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். ஆகவேதான், பீரங்கி குண்டு எகிப்தைத் தாக்கியது பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதேசமயம், இது திட்டமிட்ட தாக்குதல் இல்லை என்றும், வருத்தம் தெரிவிப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து இஸ்ரேல் இராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “சில மணி நேரங்களுக்கு முன்பு இஸ்ரேலின் பீரங்கி தவறுதலாக கேரேம் ஷலோம் எல்லையை ஒட்டிய எகிப்து இராணுவ எல்லைப் பகுதியை நோக்கி தாக்கி இருக்கிறது. இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இச்சம்பவத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படை வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: IsraelFiredEgypt
ShareTweetSendShare
Previous Post

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளி அட்டவணை!

Next Post

டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி – ஆளுநர் முடிவு என்ன?

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies