இராஜராஜ சோழனின் 1038-வது சதயவிழா: மின்னொளியில் ஜொலிக்கும் தஞ்சை!
Jul 29, 2026, 01:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராஜராஜ சோழனின் 1038-வது சதயவிழா: மின்னொளியில் ஜொலிக்கும் தஞ்சை!

Murugesan M by Murugesan M
Oct 24, 2023, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழனின் 1038-ஆம் ஆண்டு சதய விழா இன்றும், நாளையும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தஞ்சை பெரிய கோவில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கின்றன.

மாமன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோவில் உலகப்புகழ் பெற்றுத் திகழ்வதுடன், உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகவும் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்னரும் வானுயர்ந்து நிற்கும் விமான கோபுரத்துடன் அழகுறக் காட்சியளிக்கிறது.

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலைக் கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழன் முடி சூட்டிய நாளை, அவர் பிறந்த ஐப்பசி மாதம் சதய நட்சத்திர நாளன்று, ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு இராஜராஜ சோழனின், 1038-வது சதய விழா இன்றும், நாளையும் கொண்டாடப்படுகிறது.

சதய விழாவை முன்னிட்டு, பெரிய கோவில் விமானம், மராட்டா நுழைவு வாயில், கேரளாந்தகன் நுழைவு வாயில், இராஜராஜன் நுழைவு வாயில், கோவில் உள் பிரகாரம், வெளிபிரகாரம், கோவில் மதில்சுவர் என அனைத்து இடங்களிலும், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும், தஞ்சாவூரின் முக்கிய இடங்களில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தஞ்சை மாநகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், திருமுறை அரங்கம், மேடை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், திருமுறை பண்ணிசை, நாத சங்கமம், திருமுறை இசை, சிறப்பு பரதநாட்டியம், குரல் இசை, கவியரங்கம், சிவதாண்டவம், இசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறவுள்ளது.
மேலும் மாமன்னன் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல், திருமுறை திருவீதி உலா, பெருவுடையார் பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம், பெருந்தீப வழிபாடு, நடன நிகழ்ச்சி, தேவார இன்னிசை, நாட்டியாஞ்சலி, மாமன்னன் இராஜராஜன் விருது வழங்குதல், சுவாமி திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

Tags: 1038th death anniversary of Rajaraja CholaRajaraja Chola
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 48.86 அடியாக அதிகரிப்பு!

Next Post

ஓசூர் இராமநாயக்கன் ஏரியில் கங்கா ஆரத்தி நிகழ்ச்சி!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies