கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்!
Sep 13, 2026, 01:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்!

ஆளுநர் மாளிகை சார்பில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார்!

Murugesan M by Murugesan M
Oct 26, 2023, 02:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக ராஜ் பவன் சார்பில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது : “நேற்று (25.10.2023) மதியம் சுமார் 2.45 மணி அளவில். சென்னை ராஜ்பவன் மெயின் கேட் எண்.1 வழியாக பெட்ரோல் குண்டுகளுடன் சில மர்மநபர்கள் ஊடுருவ முயன்றனர். இருப்பினும், விழிப்புடன் இருந்த காவலர்கள், அவர்கள் ராஜ்பவனுக்குள் நுழைவதைத் தடுத்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ராஜ்பவனின் பிரதான நுழைவாயில் கேட்-1ல் முதல் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பிறகு, அது பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறித. மர்ம நபர்களை பிடிக்க பாதுகாப்பு படையினர் விரைந்தனர்.

அப்போது ராஜ்பவனின் பாதுகாப்புப் பணியாளர்களை தாக்கியவரை அடக்க முயன்றபோதும், மற்றொரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது, இதன் விளைவாக ராஜ்பவனின் பிரதான நுழைவாயிலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. எனினும் தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

ஐபிசி பிரிவு 124 மற்றும் பிற தொடர்புடைய சட்ட விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆளுநரின் துணைச் செயலர் மற்றும் கட்டுப்பாட்டாளரால், பெருநகர சென்னை காவல் ஆணையரிடம் காவல்துறை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரை மீறி, அவரது அரசியலமைப்புச் சட்டப் பணிகளைச் செய்வதிலிருந்து அவரைத் தடுக்கும் நோக்கத்தில் அச்சுறுத்தல் முயற்சிகள் இதற்கு முன்பும் நடந்துள்ளன. ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்காததால், போலீசில் புகார் அளித்தும் பலனில்லை.

ஏப்ரல் 18, 2022 அன்று கவர்னர் தருமபுரம் ஆதீனத்தில் திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்தபோது, தடியடி மற்றும் கற்கள் மூலம் தாக்குல் நடத்தப்பட்டது.

இதுதொடர்பாக ராஜ்பவன் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது, ஆனால் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை மற்றும் தாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி அடுத்தக்கட்ட நடவடிக்கையாக பெட்ரோல் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக மத்திய அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்ப முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பெட்ரோல் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக சென்னை போலீசார் மேற்கொண்டு உள்ள நடவடிக்கைகள் பற்றி விரிவான அறிக்கையை கவர்னர் கேட்டுப்பெற உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Tags: Governor
Share
Tweet
SendShare
Previous Post

இன்று முதல் கனடாவுக்கு மீண்டும் விசா சேவை – மத்திய அரசு அறிவிப்பு!

Next Post

மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பார் : திருவாவடுதுறை ஆதீனம் உறுதி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies