தமிழக ஆளுநர் மீது தாக்குதல் - டி.ஆர்.பாலுவுக்கு இந்து முன்னணி கண்டனம்!
Sep 13, 2026, 01:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக ஆளுநர் மீது தாக்குதல் – டி.ஆர்.பாலுவுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Murugesan M by Murugesan M
Oct 27, 2023, 11:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக ஆளுநர் மாளிகை மீது பிரபல ரவுடி பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்திற்கும், தமிழக ஆளுநர் மீது திமுக எம்பி டிஆர் பாலு அநாகரிகமாகப் பேசியதற்கும் இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளிட்டுள்ள அறிக்கையில், கவர்னர் அவர்கள் ஆரியம், திராவிடம் என்பது எங்கும் இல்லை. நாடு விடுதலையான நாளை துக்க நாளாக அறிவித்தவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். பள்ளி படிப்பை கூட முடிக்காத தற்குறி கால்டுவெல் தான் திராவிட சித்தாந்திகள் தூக்கி பிடிக்கும் அறிவாளி என்ற கருத்துக்களை மருது பாண்டியர் நிகழ்வில் பேசினார்.

இதற்கு திமுக எம்.பி‌. டி.ஆர். பாலு தமிழக கவர்னரை அநாகரிகமாக விமர்சனம் செய்து இருந்தார். பிரபல ரவுடியான கருக்கா வினோத் கவர்னர் மாளிகை மீது இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளான். நல்ல வேளையாக அவை தீப்பற்றி வெடிக்கவில்லை. அப்படி ஏதாவது நடந்து இருந்தால் அங்கு பணியில் இருந்த காவலர்கள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். அந்த ரவுடி கருக்கா வினோத் மீது 7 வழக்குகள் இருப்பதாகவும், முதல்நாள் தான் அவன் பிணையில் வெளிவந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இத்தகைய ரவுடிக்கு தமிழகத்தில் சுலபமாக ஜாமீன் கிடைக்கிறது என்பதன் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எத்தகைய சீர்குலைவை அடைந்துள்ளது என்பது புரியும். மேலும் முதல் நாள் வந்தவன் மீண்டும் குற்ற செயலில் ஈடுபடும் தைரியம் எங்கு இருந்து வருகிறது. பத்து நாட்களில் ஜாமீன் கிடைத்துவிடும் என்ற தைரியம் தானே?

மேலும், அந்த ரவுடி பெரிய சமூக அக்கறை உள்ளவன் போல சித்தரிக்கப்பட்டு அதாவது கவர்னர் குற்றவாளிகளை விடுதலை செய்யும் தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை என்று ஒரு செய்தியும், தமிழக கவர்னர் நீட் தேர்வு ரத்து செய்யக் கொடுத்த தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை என்ற கோபத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் செய்தி வெளியாகிறது. காவல்துறை ஆளும்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஒரு ரவுடியின் அராஜக செயலுக்கு காரணம் வெளியிடும் அளவிற்கு காவல்துறை துரிதமாக செயல்படுவது வேடிக்கையானது. இத்தகைய போக்கு காவல்துறையின் கண்ணியத்திற்கு இழுக்கு என்பதை இந்து முன்னணி சுட்டிக்காட்டுகிறது.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஆளும் கட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசுவது நடந்து வருகிறது. இது ஒருவகையான பாசிச மனநோய். எதிர் கருத்து தெரிவிப்பவர்கள் மீது தாக்குதல் நடக்கும் என்ற பயத்தை உருவாக்க இதுபோல் நடத்தப்படுகிறது என்பது வெளிப்படையான உண்மை.

அதுமட்டுமல்லாது மேலும் ஒரு அநாகரிகமான செயலை ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. அது சமூக வலைதளங்களில், பொது கூட்டங்களில் திமுக அரசை அமைச்சர்கள் செயல்பாட்டை ஜனநாயக ரீதியில் விமர்சனம் செய்தாலே குறைந்தது ஐந்து பிரிவுகளில் வழக்கு போடுவதும் அதில் ஜாமினில் வெளிவர முடியாத இரண்டு பிரிவுகளில் வழக்கு போட்டு சிறையில் தள்ளுகிறது காவல்துறை.

அதேசமயம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறை திமுகவினரின் மனம் குளிர அவர்கள் புகார் மீது நடவடிக்கை எடுப்பதே தலையாய கடமையாக நினைத்து செயல்படுகிறது என்பது வேதனையான உண்மை. தமிழகத்தில் உச்சபட்ச பாதுகாப்பு உள்ள இடத்தில் இதுபோன்ற வன்முறை செயல்கள் தொடர்ந்து நடந்துவருகிறது. காவல் நிலையங்களில் நீதிமன்றங்களில் அரசு அலுவலகங்களில் தொடர்ந்து வன்முறை தாக்குதல் நடத்தப்படுவது கவலை அளிக்கும் விஷயம்.

எனவே, இது போன்ற வன்முறை செயலில் ஈடுபடும் சமூகவிரோதிகள் மீது காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Tags: hindhu munani
Share
Tweet
SendShare
Previous Post

பெட்ரோல் வெடிகுண்டு வீசியவரை ஜாமீனில் எடுத்த திமுகவினர் – பாஜக குற்றச்சாட்டு!

Next Post

தங்கம் வென்ற தமிழக வீராங்கனை !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies