இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் தீவிரவாதிகளால் உருக்குலைந்து வரும் காஸா நகரம்!
Apr 29, 2026, 02:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் தீவிரவாதிகளால் உருக்குலைந்து வரும் காஸா நகரம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 28, 2023, 02:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹமாஸ் தீவிரவாதிகளின் சுயநலத்தால், காஸா நகரமே உருக்குலைந்து வருகிறது. இஸ்ரேல் விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிந்து வருவதால் காஸா நகரிலுள்ள கட்டடங்கள் தரைமட்டமாகி வருகின்றன.

கடந்த 7-ம் தேதி காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் பலியான நிலையில், இஸ்ரேல் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது. ஹமாஸ் தீவிரவாதிகள் திருப்பித் தாக்க முடியாத அளவுக்கு அசுரத் தாக்குதல் நடத்தி வருகிறது. விமானப்படை மூலம் ஹமாஸ் தீவிரவாதிகளின் இலக்குகளை குறிவைத்து குண்டு மழை பொழிந்து வருகிறது.

இஸ்ரேலின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் திணறி வருகின்றனர். இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், முக்கிய தீவிரவாத முகாம்கள், ஹமாஸ் தலைவர்களின் வீடுகள், விமானப்படைத் தளம், கப்பற்படைத் தளம் என குறிவைத்துத் தாக்கியதில், 750-க்கும் மேற்பட்ட தீவிரவாத இலக்குகள் தரைமட்டமாகி இருக்கிறது. மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளின் முக்கியத் தளபதிகள் உட்பட 350-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

22-வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேல் வான்வெளித் தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. வானில் இருந்து தீப்பந்துகள் விழுவது போல இஸ்ரேல் நாட்டின் குண்டுகள் விழுகின்றன. இத்தாக்குதலில் இதில், ஹமாஸ் தீவிரவாதிகளின் இலக்குகள் மட்டுமன்றி, பொதுமக்களின் வீடுகளும் தரைமட்டமாகி வருகின்றன. இதில், ஏராளமானோர் மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டனர். இதனால், காஸா நகரமே உருக்குலைந்து வருகிறது.

மேலும், எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 8,500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும், 20,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். எனவே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், காஸா நகரின் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேல், தரை வழித் தாக்குதலையும் தொடங்கி இருக்கிறது. காஸா எல்லையில் முற்றுகையிட்டிருக்கும் இஸ்ரேலின் தரைப்படை பீரங்கிகள், புறநகர் பகுதிக்குள் ஊடுருவி ஹமாஸ் அமைப்புகளின் இலக்குகளை குறிவைத்து தாக்கி விட்டு, மீண்டும் தங்களது நிலைக்கே திரும்பிவிடுகின்றனர். அந்த வகையில், நேற்று காஸா நகருக்குள் ஊடுருவிய இஸ்ரேல் இராணுவத்தினருக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டது.

இதை ஹமாஸ் தீவிரவாதிகளும் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். எல்லைக்கு அருகில் உள்ள பகுதியில் இஸ்ரேல் வீரர்களுடன், தங்கள் போராளிகள் மோதலில் ஈடுபட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. மேலும், இஸ்ரேலுக்கு எதிராக தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர். இதனால் போர் மேலும் தீவிரமடையும் என்றும், காஸா நகரம் முற்றிலுமாக தரைமட்டமாகும் என்று அஞ்சப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, காஸாவில் தொலைத் தொடர்புத் துறை சேவைகள் அனைத்தும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இணையதளம் மற்றும் செல்போன் சேவைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, காஸாவில் உள்ள பொதுமக்கள் வெளியுலகத் தொடர்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். ஐ.நா. மற்றும் செஞ்சிலுவைச் சங்கமும் தங்களது பணியாளர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று தெரிவித்திருக்கின்றன. இதனால், காஸாவில் என்ன நடக்கிறது என்பதே யாருக்கும் தெரியவில்லை.

Tags: WARIsraelHamas
ShareTweetSendShare
Previous Post

சீன மருத்துவ நிபுணர் திடீர் மரணம்

Next Post

ககன்யான்: பெண் விண்வெளி வீராங்கனை அனுப்ப திட்டம்

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies