அமெரிக்காவில் இந்திய மாணவருக்கு கத்திக்குத்து!
Sep 13, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் இந்திய மாணவருக்கு கத்திக்குத்து!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 1, 2023, 03:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவில் 24 வயதான இந்திய மாணவர்  அமெரிக்க இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவின் தெலங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஆசிரியர் இராமமூர்த்தி என்பரின் மகன் பூச்சா வருண் ராஜ். 24 வயதான இவர், அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இண்டியானா மாகாணத்தில் வால்பரைசோ பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். படித்து வருகிறார். இவர், சம்பவத்தன்று வால்பரைசோ நகரிலுள்ள உடற்பயிற்சி மையத்துக்குச் சென்றிருக்கிறார்.

அப்போது அங்கு வந்த ஜோர்டான் ஆண்ட்ராட் என்கிற அமெரிக்க இளைஞர், வருணை சரமாரியாகக் கத்தியால் குத்தி இருக்கிறார். இதில் படுகாயமடைந்த வருண், ஃபோர்ட் வெயினில் உள்ள லுத்ரன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். எனினும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வருண் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 5 சதவீதம் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

இதையடுத்து, கத்தியால் குத்திய ஜோர்டான் ஆண்ட்ராட் என்ற அமெரிக்க இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது பயங்கர ஆயுதத்தை பயன்படுத்தியது மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதனிடையே, இச்சம்பவம் குறித்து வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கும், இந்தியாவில் உள்ள வருணின் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும், அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் வருண் குணமடைவார் என்று நம்பிக்கைத் தெரிவித்தனர். மேலும், இந்த மிருகத்தனமான தாக்குதலுக்கு நீதி கிடைக்கும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

ஜோர்டான் ஆண்ட்ராட் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், “மசாஜ் செய்வதற்காக உடற்பயிற்சி மையத்துக்கு வந்தேன். அந்த அறையில் யாரும் இல்லாததால், மற்றொரு அறைக்குச் சென்றேன். அங்கிருந்த வருணை பார்த் போது, வித்தியாசமாகத் தெரிந்தார். அவரால் அச்சுறுத்தல் ஏற்படும் என்று கருதி, அவரை கத்தியால் குத்தினேன்” என்றுகூறியிருக்கிறார்.

Tags: americaIndian studentstabbed
Share
Tweet
SendShare
Previous Post

டிடிஎப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

விவசாயிகள் மீது திமுகவுக்கு அக்கறையில்லை! – அண்ணாமலை குற்றச்சாட்டு.

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies