டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரசாரம்!
Sep 13, 2026, 02:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரசாரம்!

Murugesan M by Murugesan M
Nov 3, 2023, 03:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு, ‘டிஜிட்டல்’ முறையில் ஆயுள் சான்றிதழ் வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில், இந்த மாதம் முழுதும், தீவிர பிரசார இயக்கங்கள் நடத்த, மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறை திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்று, ஓய்வூதியம் பெறுவோர், ஆண்டுக்கு ஒருமுறை, உயிருடன் இருப்பதை உறுதி செய்யும் ஆயுள் சான்றிதழ் வழங்க வேண்டும். கடந்த, 2014-ஆம் ஆண்டு, இது டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. ஜீவன் பிரமான் எனப்படும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்குவதை மத்திய அரசு தீவிரப்படுத்தியது. இதன்படி ஓய்வூதியதாரர்கள், தங்களுடைய கைவிரல்கள் பதிவு, கண்விழி பதிவிடுவது கட்டாயமாக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் ஆதார் ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம், கடந்த 2021-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, ஓய்வூதியதாரர்கள், தங்களுடைய மொபைல்போனில் இருந்து, முகத்தைப் பதிவு செய்து, டிஜிட்டல் ஆயுள் சான்றிதழைப் பெற முடியும்.

இந்த முறையை ஓய்வூதியதாரர்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் பிரசாரம், கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது. அப்போது, 37 நகரங்களில் நடந்த இந்த பிரசார இயக்கத்தின் வாயிலாக, 35 இலட்சம் பேருக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதன் இரண்டாவது கட்ட பிரசார இயக்கத்தை, இந்த மாதம் முழுதும் நடத்த மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி, நாடு முழுதும், 100 நகரங்களில், 500 இடங்களில் பிரசார இயக்கம் நடக்க உள்ளது. இதில், 50 இலட்சம் பேருக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆதார் ஆணையம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ‘ஓய்வூதியம்’ விநியோகிக்கும், 17 வங்கிகள் மற்றும் அனைத்து அமைச்சகங்கள், துறைகளுடன் இணைந்து இந்த இயக்கம் நடத்தப்பட உள்ளது. இதற்காக பிரசார நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags: digital indiaDigital Life Certificate Campaign
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்க தேர்தல் : இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் குறித்த முழு விவரம்!

Next Post

பூபேஷ் பாகல் ப்ரீ பெய்டு முதல்வர்: அமித்ஷா கடும் தாக்கு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies