வங்கதேசம் செய்தது சரியா ?
Apr 29, 2026, 10:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கதேசம் செய்தது சரியா ?

Murugesan M by Murugesan M
Nov 7, 2023, 12:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் ரஹ்மானை கண்டுகொள்ளாத வங்கதேசம் மேத்யூஸை மட்டும் டைம் அவுட் செய்தது ஏன்?

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றையப் போட்டி வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இலங்கை அணி வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்து போனார். இது சமூகவலைத்தளத்தில் பேசும் பொருளாக மாறியது.

இலங்கை அணியின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸை டைம் அவுட் முறையில் அவுட் செய்த வங்கதேச வீரர்களின் செயல்பாடுகள் சரியா, தவறா என்பது குறித்து இரசிகர்கள் மத்தியில் விவாதம் எழுந்துள்ளது.

ஏஞ்சலோ மேத்யூஸ்ஸை இப்படி அவுட் செய்தது ஸ்பிரிட் ஆஃப் தி கிரிக்கெட்டுக்கு எதிராக இருப்பதாக இரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். என்ன தான் விதிகளின் படி அவுட் என்றாலும், சமரவிக்ரமா ஆட்டமிழந்து வெளியேறிய 10வது வினாடியிலேயே ஏஞ்சலோ மேத்யூஸ் மைதானத்திற்குள் வந்துவிட்டார்.

இதன்பின் உயிர் காக்கும் ஹெல்மட் சேதமாக இருப்பதை அறிந்து அதனை மாற்ற நேரம் எடுத்து கொண்டுள்ளார்.இதே வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடும் போது, பேட்டிங் செய்வதற்காக வேகமாக களமிறங்கிய முஜீப் உர் ரஹ்மான் அப்டமன் கார்டை மறந்து களம் புகுந்தார்.

இதன்பின் நினைவு வந்து, வீரர்களை கொண்டு வர சொல்லி மைதானத்திலேயே கார்டை மாற்றி கொண்டார். அப்போது வங்கதேச வீரர்கள் முஜீப் உர் ரஹ்மானுக்கு எதிராக நடுவர்களிடம் எந்த அப்பீலும் கோரவில்லை.

ஆனால் மேத்யூஸ்-க்கு மட்டும் வங்கதேசம் அப்பீல் செய்து டைம் அவுட் செய்துள்ளது. மேத்யூஸ் வேண்டுமென்றே ஹெல்மட்டை காரணமாக வைத்து நேரத்தை தாமதம் செய்திருந்தால் கூட வங்கதேசம் அப்பீல் செய்ததில் தவறில்லை என்று கூறலாம்.

ஆனால் ஹெல்மட் பட்டை அறுபட்டிருந்ததை நேரடியாக ஷகிப் அல் ஹசனிடம் காண்பித்தும் அவர்கள் அப்பீலில் இருந்து பின் வாங்கவில்லை.

இதற்கு 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதிபெற வேண்டும் என்பதற்காகவே வங்கதேச அணி மோசமான வகையில் வெற்றி பெற முயற்சித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

Tags: ICC World CupSrilanka VS Bangladesh
ShareTweetSendShare
Previous Post

கர்நாடக அரசுக்கு எதிராகப் பெண்கள் கொந்தளிப்பு!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 53.80 அடியாக உயர்வு!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies