நாடு முழுவதும் இந்த பட்டாசுகள் வெடிக்க தடை!
Aug 17, 2026, 07:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடு முழுவதும் இந்த பட்டாசுகள் வெடிக்க தடை!

Murugesan M by Murugesan M
Nov 9, 2023, 06:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பேரியம் நைட்ரேட் மற்றும் தடை செய்யப்பட்ட மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை நாடு முழுவதும் வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளைத் தடை விதிக்கக் கோரிய வழக்கு நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மாசுபடுத்தும் பட்டாசுகள் தொடர்பாக இந்த நீதிமன்றம் ஏற்கனவே, பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது என்று தெரிவித்தனர். காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைக் குறைக்கவும், தவிர்க்கவும் நடவடிக்கைகள் தொடர்பாக கூறினர். இந்த உத்தரவு இராஜஸ்தான் உட்பட நாட்டின் அனைத்து மாநிலத்திற்கும் பொருந்தும் என்று நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு தனது உத்தரவில் கூறினர்.

இராஜஸ்தான் மாநிலம் இதைக் கவனத்தில் கொண்டு, பண்டிகைக் காலங்களில் மட்டுமல்ல, அதன்பிறகும் காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

நவம்பர் 12-ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், நாட்டில் எந்த வகையான பட்டாசுகளுக்கு அனுமதி உள்ளது. பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பித்துள்ளது? என்பது குறித்து பார்ப்போம்.

உச்சநீதிமன்றம் 2018-ஆம் ஆண்டு அக்டோபரில் பசுமைப் பட்டாசுகள் தவிர, அதிக காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் பட்டாசுகளை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதித்தது. பட்டாசுகளில் பேரியம் உப்புகளைப் பயன்படுத்துவதற்கும், நீண்ட வரிசையில் இணைக்கப்பட்டுள்ள பட்டாசுகளை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது.

இதேபோல், கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் இது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. நீண்ட வரிசையில் உள்ள பட்டாசுகள் மற்றும் பேரியம் உப்பு கலந்த பட்டாசுகளைத் தயாரிப்பதற்கு அனுமதி கோரிய பட்டாசு உரிமையாளர்களின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

கடந்த 2020-ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் அனைத்து வகையான பட்டாசுகளையும் விற்பதற்காகவும், வெடிப்பதற்காகவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது. மேலும், காற்று மாசுபாடு குறைவாக உள்ள நகரங்களில் மட்டும் பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது.

Tags: supreme courtDiwali festival
Share
Tweet
SendShare
Previous Post

உலகக்கோப்பை ஹாக்கி : இந்திய அணி அறிவிப்பு !

Next Post

மது ஒழிப்பு பேரணி: சென்னை உயர்நீதிமன்ற கண்டனத்திற்கு ஆனான ஸ்டாலின் போலீஸ்!

Related News

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து – முதல்வர் ரங்கசாமி கோரிக்கை!

கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும் : நயினார் நாகேந்திரன்

ராமகோபாலனின் எழுத்துக்கள் தேசபக்தியை ஆழமாக விதைத்துள்ளது – சிபிஈஆர்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ; முதலமைச்சர் விஜய் கண்டனம்!

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடக்கம்!

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தோ-ஜப்பான் நிறுவனம் : ஹைட்ரஜன் வாகன பயன்பாடுக்கு அடித்தளம் -சிறப்பு தொகுப்பு!

பஹல்காம் தாக்குதலை அறிந்ததும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி என்ன? – மனம் திறந்த அஜித் தோவல்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திவ்யாஸ்த்ரா Mk3 ட்ரோன் – வெற்றிகரமாக சோதனை!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை – வனச்சரக அலுவலகம் சூறை, பதற்றம்!

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம் – நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பான் மசாலா விளம்பரம் – ஷாரூக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் ‘வந்தே பாரத் சரக்கு ரயில்!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் – மீனவர்கள் சாலை மறியல்!

தேசநலனில் ஒன்றுபட வேண்டும் என்பதை சொல்லாலும் செயலாலும் உணர்த்தியவர் வாஜ்பாய் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies