நாடு முழுவதும் இந்த பட்டாசுகள் வெடிக்க தடை!
Jul 18, 2026, 07:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடு முழுவதும் இந்த பட்டாசுகள் வெடிக்க தடை!

Murugesan M by Murugesan M
Nov 9, 2023, 06:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பேரியம் நைட்ரேட் மற்றும் தடை செய்யப்பட்ட மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை நாடு முழுவதும் வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளைத் தடை விதிக்கக் கோரிய வழக்கு நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மாசுபடுத்தும் பட்டாசுகள் தொடர்பாக இந்த நீதிமன்றம் ஏற்கனவே, பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது என்று தெரிவித்தனர். காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைக் குறைக்கவும், தவிர்க்கவும் நடவடிக்கைகள் தொடர்பாக கூறினர். இந்த உத்தரவு இராஜஸ்தான் உட்பட நாட்டின் அனைத்து மாநிலத்திற்கும் பொருந்தும் என்று நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு தனது உத்தரவில் கூறினர்.

இராஜஸ்தான் மாநிலம் இதைக் கவனத்தில் கொண்டு, பண்டிகைக் காலங்களில் மட்டுமல்ல, அதன்பிறகும் காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

நவம்பர் 12-ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், நாட்டில் எந்த வகையான பட்டாசுகளுக்கு அனுமதி உள்ளது. பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பித்துள்ளது? என்பது குறித்து பார்ப்போம்.

உச்சநீதிமன்றம் 2018-ஆம் ஆண்டு அக்டோபரில் பசுமைப் பட்டாசுகள் தவிர, அதிக காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் பட்டாசுகளை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதித்தது. பட்டாசுகளில் பேரியம் உப்புகளைப் பயன்படுத்துவதற்கும், நீண்ட வரிசையில் இணைக்கப்பட்டுள்ள பட்டாசுகளை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது.

இதேபோல், கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் இது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. நீண்ட வரிசையில் உள்ள பட்டாசுகள் மற்றும் பேரியம் உப்பு கலந்த பட்டாசுகளைத் தயாரிப்பதற்கு அனுமதி கோரிய பட்டாசு உரிமையாளர்களின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

கடந்த 2020-ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் அனைத்து வகையான பட்டாசுகளையும் விற்பதற்காகவும், வெடிப்பதற்காகவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது. மேலும், காற்று மாசுபாடு குறைவாக உள்ள நகரங்களில் மட்டும் பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது.

Tags: supreme courtDiwali festival
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை ஹாக்கி : இந்திய அணி அறிவிப்பு !

Next Post

மது ஒழிப்பு பேரணி: சென்னை உயர்நீதிமன்ற கண்டனத்திற்கு ஆனான ஸ்டாலின் போலீஸ்!

Related News

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!

பழனி கோயில் நில பத்திரப்பதிவு விவகாரம் – சார் பதிவாளருக்கு முன்ஜாமின்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் எழுச்சி : முசாஃபராபாத் பேரணிக்கு அழைப்பு – சிறப்பு கட்டுரை!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் : ரயில்வே துறையில் பசுமைப் புரட்சி – சிறப்பு கட்டுரை!

500 இல்லை… இனி 100 சதவீதம் : ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்கா சலுகை, இந்தியாவிற்கு என்ன லாபம் ? – சிறப்பு கட்டுரை!

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் ஏன்? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடி மாத முதல் வெள்ளி – அம்மன் கோயில்களில் திரண்ட பக்தர்கள்!

நாட்டின் முதல் மற்றும் உலகின் நீண்ட தூர ஹைட்ரஜன் ரயில் சேவை – பிரதமர் தொடங்கி வைத்தார்!

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கரூரில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் – இந்து அமைப்புகள் கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

“மேகாலயா பிராஜக்ட்” – 15 தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சித்தது அம்பலம்!

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பதிவுத்துறை டிஐஜி ஆனந்துக்கு பதவி உயர்வு வழங்க மறுத்தது சரிதான் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

பழனி கோவில் நில பதிவு விவகாரம் – சிபிசிஐடி விசாரணை தீவிரம்!

நாகர்கோவில் சபரி வர்மன் உயிரிழந்த விவகாரம் – தென்தாமரைக்குளம் எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்!

ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் – முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies