இந்தியா ஒரு முன்னணி பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது! - குடியரசு துணைத் தலைவர் ஜெதீப் தன்கர்
Sep 14, 2026, 02:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா ஒரு முன்னணி பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது! – குடியரசு துணைத் தலைவர் ஜெதீப் தன்கர்

Murugesan M by Murugesan M
Nov 15, 2023, 07:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

“இந்தோ-பசிபிக் பிராந்திய உரையாடல்” 2023-ல் குடியரசு துணைத் தலைவர் முக்கிய உரையாற்றினார்.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற “இந்தோ-பசிபிக் பிராந்திய உரையாடலின்” 2023 -ல் சிறப்புரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் ஜெதீப் தன்கர், விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக, இந்தியா சுதந்திரமான மற்றும் அமைதியான ஆட்சி அடிப்படையிலான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை விரும்புகிறது என்று கூறினார்.  இந்த நிகழ்வின் போது, கேப்டன் ஹிமாத்ரி தாஸ் எழுதிய “கடல்சார் பாதுகாப்புக்கான இந்தியா மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு” என்ற புத்தகத்தையும் குடியரசு துணைத் தலைவர் வெளியிட்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய

உலகளாவிய அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒரு நிலையான காரணியாக இந்தியா ஒரு முன்னணி பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. உலகளாவிய ஒழுங்கை உறுதிப்படுத்த நாம் முன்னணியில் இருந்து வழிநடத்துவதை உறுதி செய்ய இந்தியா ஒரு முக்கியமான மற்றும் ஆக்கபூர்வமான நாடாக பங்கு வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கைக் கொண்ட இந்தியா, ஐ.நா. பாதுகாப்புக் குழுமத்தில் நியாயமாக பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை என்றும், இது நிச்சயமாக இந்த உலகளாவிய அமைப்பின் செயல்திறனைக் குறைக்கிறது என்று அவர் தமது உரையில் தனது வேதனையையும் வெளிப்படுத்தினார். அதில் நாம் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று வலியுறுத்தினார்.

செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், ட்ரோன்கள் மற்றும் ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் போன்ற சீர்குலைக்கும் தொழில்நுட்பங்களைப் பற்றி குறிப்பிட்ட அவர், இந்தக் களங்களின் திறமை மற்றும் தேர்ச்சி ஆகியவை எதிர்காலத்தின் உத்தி சார்ந்த தேவைகள் மற்றும் இல்லாதவற்றைத் தீர்மானிக்கும் என்று கூறினார்.

இது தொடர்பாக, இந்திய பெரு நிறுவனங்கள் துறை, சிவில் மற்றும் ராணுவப் படைகளுடன் ஒன்றிணைந்து, மேற்கத்திய நாடுகளில் செய்வது போல இதுபோன்ற தொழில்நுட்பங்களை உருவாக்க பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“இந்தியாவின் பொருளாதார வலிமை வளரும்போது, உலகளாவிய மற்றும் பிராந்திய விவகாரங்களில் நமது பங்குகளும் சவால்களும் அதிகரிக்கின்றன” என்று குறிப்பிட்டார். இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளிடையே ஒரு தயார்நிலை, மறுமலர்ச்சி மற்றும் பொருத்தமான பங்குதாரராக இந்தியாவின் நிலையை வலுப்படுத்த பிராந்தியத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான உத்தியை உருவாக்க அழைப்பு விடுத்தார்.

அனைத்து தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இருந்தபோதிலும் கடற்கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தல் இன்னும் ஒரு சவாலாகவே உள்ளது என்று குறிப்பிட்டார். இவற்றின் மூலம் உருவாக்கப்படும் செல்வம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க சில நபர்களால் பயன்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், தேசிய கடல்சார் அறக்கட்டளையின் தலைவர் துணை அட்மிரல் பிரதீப் சவுகான், தேசிய கடல்சார் அறக்கட்டளையின் தலைமை இயக்குநர் மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Vice-President Jagdeep Dhankhar
Share
Tweet
SendShare
Previous Post

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் கடன் வழங்க தடை!

Next Post

பா.ஜ.க.வின் நல்லாட்சியை மக்கள் நம்புகிறார்கள்: பிரதமர் மோடி!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies