பா.ஜ.க.வின் நல்லாட்சியை மக்கள் நம்புகிறார்கள்: பிரதமர் மோடி!
Jul 28, 2026, 10:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பா.ஜ.க.வின் நல்லாட்சியை மக்கள் நம்புகிறார்கள்: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 15, 2023, 07:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பா.ஜ.க.வின் நல்லாட்சியை மக்கள் நம்புகிறார்கள், காங்கிரஸ் கட்சியின் வெற்று வாக்குறுதிகளை அல்ல என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

சத்தீஸ்கரில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கும் நிலையில், மீதமுள்ள 70 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால், இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருப்பதால் நேரடித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியவில்லை. எனவே, தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டிருக்கும் பதிவில் பா.ஜ.க.வுன் நல்லாட்சியை மக்கள் நம்புவதாகத் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இம்முறை சத்தீஸ்கர் தேர்தல் பிரசாரத்தின்போது, எனது அனுபவங்கள் ஆச்சரியமானவையாக இருந்தன. சத்தீஸ்கரின் கடின உழைப்பாளி மக்கள் தங்கள் மாநிலத்தை சிறப்பாகவும், சிறந்ததாகவும் மாற்றுவதற்கான புதிய நம்பிக்கைகள் மற்றும் புதிய ஆற்றலுடன் நிரம்பி இருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் தவறான நிர்வாகம் மற்றும் ஊழலின் பிடியில் இருந்து சத்தீஸ்கரை யாரால் விடுவிக்க முடியும் என்றால், அது நிச்சயமாக பா.ஜ.க.வால் மட்டுமே முடியும் என்பது சத்தீஸ்கர் மக்களுக்குத் தெரியும். பா.ஜ.க.தான் சாதித்தது, பா.ஜ.க.தான் மாநிலத்தை மேம்படுத்தும்.

அடுத்த சில ஆண்டுகளில் சத்தீஸ்கர் தனது 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இன்று முதல்முறையாக வாக்களிக்கப் போகும் மாநிலத்தில் உள்ள இளைஞர்கள், வளமான சத்தீஸ்கர் கனவுகளுடன் இருந்து வருகின்றனர். அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த இந்தியா என்ற உறுதிமொழியுடன், வளர்ந்த சத்தீஸ்கரின் உறுதிமொழியையும் அவர்கள் எடுத்திருக்கிறார்கள்.

அவர்கள் தங்களது வாழ்நாளின் அடுத்த 25 ஆண்டுகளை வளர்ந்த சத்தீஸ்கர், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்காக அர்ப்பணிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். மாநிலத்தின் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் நமது வளர்ச்சி மாதிரியுடன் இணைந்திருக்கும் விதம் மிகவும் ஊக்கமளிக்கிறது.

சத்தீஸ்கர் இளைஞர்களின் இந்த சக்தி, மாற்றத்தின் புதிய அத்தியாயத்தை எழுதப் போகிறது. சத்தீஸ்கரின் மஹ்தாரி, நமது சகோதரிகள் மற்றும் மகள்களும் மாநிலத்தின் வளர்ச்சிக் கொடியை உயர்த்தி இருக்கிறார்கள். இன்று, இந்திய பெண்கள் அதிகாரம் பெற முயற்சிக்கும் விதத்தின் தாக்கத்தை சத்தீஸ்கரிலும் காணலாம்.

இத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்பது உறுதி. பா.ஜ.க.வின் நல்லாட்சியை மக்கள் நம்புகிறார்களே தவிர, காங்கிரஸின் வெற்று வாக்குறுதிகளை அல்ல. பா.ஜ.க. தனது ஒவ்வொரு தீர்மானத்தையும் நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் வரவிருக்கும் பா.ஜ.க. அரசு, உங்கள் அபிலாஷைகள் மற்றும் மாநிலத்தின் செழிப்புக்கான அரசாக இருக்கும் என்று நான் மக்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

 

छत्तीसगढ़ में इस बार चुनाव अभियान के दौरान मेरे अनुभव बहुत ही अद्भुत रहे, अभूतपूर्व रहे। कहा जाता है- छत्तीसगढ़िया…सबसे बढ़िया। मैंने इसकी प्रतिध्वनि चारों तरफ महसूस की। छत्तीसगढ़ के परिश्रमी लोग अपने राज्य को और बेहतर बनाने के लिए, सर्वश्रेष्ठ बनाने के लिए नई उम्मीदों और नई…

— Narendra Modi (@narendramodi) November 15, 2023

Tags: PM ModiElectionChhattisgarh
ShareTweetSendShare
Previous Post

இந்தியா ஒரு முன்னணி பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது! – குடியரசு துணைத் தலைவர் ஜெதீப் தன்கர்

Next Post

கடலூரில் 1-ம் எண் புயல் கூண்டு ஏற்றம் – என்ன காரணம்?

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies