காஸா மருத்துவமனையில் ஹமாஸ் தீவிரவாதிகளின் 2 சுரங்கப்பாதைகள் கண்டுபிடிப்பு!
Apr 29, 2026, 01:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஸா மருத்துவமனையில் ஹமாஸ் தீவிரவாதிகளின் 2 சுரங்கப்பாதைகள் கண்டுபிடிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 20, 2023, 01:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஸா மருத்துவமனையில் ஹமாஸ் தீவிரவாதிகளின் 10 மீட்டர் மற்றும் 55 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதைகளை இஸ்ரேல் இராணுவம் கண்டுபிடித்திருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. 43-வது நாளாக போர் நீடித்து வரும் காஸா நகரில் 12,000 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

முதலில் வான்வழித் தாக்குதலை மட்டுமே நடத்தி வந்த இஸ்ரேல் இராணுவம், தற்போது முப்படைகளையும் களத்தில் இறக்கி அதிரடி காட்டி வருகிறது. அந்த வகையில், காஸா நகரின் பெரும்பான்மையான பகுதிகளை இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றி இருக்கிறது. அதேசமயம், ஹமாஸ் தீவிரவாதிகள் சுரங்கப் பாதைகளுக்குள் பதுங்கிக் கொண்டு இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, மருத்துவமனைகள், குடியிருப்பு பகுதிகளின் அடியில் சுரங்கப் பாதைகளை அமைத்துக் கொண்டு மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் இராணுவம் குற்றம்சாட்டி வருகிறது.

அந்த வகையில், காஸா நகரின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனையின் அடியில் சுரங்கப்பாதை அமைத்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருந்தது. ஆனால், இதை ஹமாஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான், அல் ஷிபா மருத்துவமனையை இஸ்ரேல் இராணுவம் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதையடுத்து, அந்த மருத்துவமனையில் சல்லடை போட்டு இஸ்ரேல் இராணுவம் தேடிவந்தது. இந்த சூழலில், மருத்துவமனையில் அடியில் 10 மீட்டர் மற்றும் 55 மீட்டர் நீளமுள்ள 2 சுரங்கப் பாதைகளை இஸ்ரேல் இராணுவத்தினர் கண்டு பிடித்திருக்கிறார்கள். இதை வீடியோ ஆதாரத்துடன் இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டிருக்கிறது.

இது குறித்து இஸ்ரேல் இராணுவத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வீடியோ காட்சிகளுடன் வெளியிடப்பட்டிருக்கும் பதிவில், “இஸ்ரேல் பாதுகாப்புப்படை அல் ஷிபா மருத்துவமனைக்கு அடியில் ஹமாஸ் தீவிரவாதிகள் அமைத்திருந்த 10 மீட்டர் மற்றும் 55 மீட்டர் நீளமுள்ள 2 சுரங்கப்பாதைகளை கண்டுபிடித்திருக்கிறது. இந்த சுரங்கப்பாதையின் நுழைவு வாயில்கள் குண்டு வெடிப்பு தடுப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளைக் கொண்டதாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இஸ்ரேல் இராணுவம் நுழைவதைத் தடுக்கும் வகையில், காஸா நகர மக்களையும், அல் ஷிபா மருத்துவமனை நோயாளிகளையும் ஹமாஸ் தீவிரவாதிகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாக கடந்த சில வாரங்களாவே உலகிற்கு கூறி வருகிறோம். தற்போது அதற்கான ஆதாரமாக சுரங்கப்பாதை இருப்பதை கண்டுபிடித்து உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே, அல் ஷிபா மருத்துவமனை நோயாளிகளை வெளியேறும்படி இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கும் இஸ்ரேல் பாதுகாப்புப்படை, நோயாளிகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும்படி மருத்துவமனை இயக்குனர் விடுத்த வேண்டுகோளின்படி, வேறு மருத்துவமனைக்கு மாற்ற சம்மதித்ததாக தெரிவித்திருக்கிறது.

Tags: TunnelIsraelHamas
ShareTweetSendShare
Previous Post

இந்திய அணியின் அடுத்தப் பயிற்சியாளர் யார்?

Next Post

இது என்ன கணக்கு சேகர் பாபு? – ஹெச்.ராஜா கேள்வி

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies