காஸா மருத்துவமனையில் ஹமாஸ் தீவிரவாதிகளின் 2 சுரங்கப்பாதைகள் கண்டுபிடிப்பு!
Jul 29, 2026, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஸா மருத்துவமனையில் ஹமாஸ் தீவிரவாதிகளின் 2 சுரங்கப்பாதைகள் கண்டுபிடிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 20, 2023, 01:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஸா மருத்துவமனையில் ஹமாஸ் தீவிரவாதிகளின் 10 மீட்டர் மற்றும் 55 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதைகளை இஸ்ரேல் இராணுவம் கண்டுபிடித்திருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. 43-வது நாளாக போர் நீடித்து வரும் காஸா நகரில் 12,000 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

முதலில் வான்வழித் தாக்குதலை மட்டுமே நடத்தி வந்த இஸ்ரேல் இராணுவம், தற்போது முப்படைகளையும் களத்தில் இறக்கி அதிரடி காட்டி வருகிறது. அந்த வகையில், காஸா நகரின் பெரும்பான்மையான பகுதிகளை இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றி இருக்கிறது. அதேசமயம், ஹமாஸ் தீவிரவாதிகள் சுரங்கப் பாதைகளுக்குள் பதுங்கிக் கொண்டு இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, மருத்துவமனைகள், குடியிருப்பு பகுதிகளின் அடியில் சுரங்கப் பாதைகளை அமைத்துக் கொண்டு மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் இராணுவம் குற்றம்சாட்டி வருகிறது.

அந்த வகையில், காஸா நகரின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனையின் அடியில் சுரங்கப்பாதை அமைத்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருந்தது. ஆனால், இதை ஹமாஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான், அல் ஷிபா மருத்துவமனையை இஸ்ரேல் இராணுவம் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதையடுத்து, அந்த மருத்துவமனையில் சல்லடை போட்டு இஸ்ரேல் இராணுவம் தேடிவந்தது. இந்த சூழலில், மருத்துவமனையில் அடியில் 10 மீட்டர் மற்றும் 55 மீட்டர் நீளமுள்ள 2 சுரங்கப் பாதைகளை இஸ்ரேல் இராணுவத்தினர் கண்டு பிடித்திருக்கிறார்கள். இதை வீடியோ ஆதாரத்துடன் இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டிருக்கிறது.

இது குறித்து இஸ்ரேல் இராணுவத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வீடியோ காட்சிகளுடன் வெளியிடப்பட்டிருக்கும் பதிவில், “இஸ்ரேல் பாதுகாப்புப்படை அல் ஷிபா மருத்துவமனைக்கு அடியில் ஹமாஸ் தீவிரவாதிகள் அமைத்திருந்த 10 மீட்டர் மற்றும் 55 மீட்டர் நீளமுள்ள 2 சுரங்கப்பாதைகளை கண்டுபிடித்திருக்கிறது. இந்த சுரங்கப்பாதையின் நுழைவு வாயில்கள் குண்டு வெடிப்பு தடுப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளைக் கொண்டதாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இஸ்ரேல் இராணுவம் நுழைவதைத் தடுக்கும் வகையில், காஸா நகர மக்களையும், அல் ஷிபா மருத்துவமனை நோயாளிகளையும் ஹமாஸ் தீவிரவாதிகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாக கடந்த சில வாரங்களாவே உலகிற்கு கூறி வருகிறோம். தற்போது அதற்கான ஆதாரமாக சுரங்கப்பாதை இருப்பதை கண்டுபிடித்து உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே, அல் ஷிபா மருத்துவமனை நோயாளிகளை வெளியேறும்படி இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கும் இஸ்ரேல் பாதுகாப்புப்படை, நோயாளிகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும்படி மருத்துவமனை இயக்குனர் விடுத்த வேண்டுகோளின்படி, வேறு மருத்துவமனைக்கு மாற்ற சம்மதித்ததாக தெரிவித்திருக்கிறது.

Tags: TunnelIsraelHamas
ShareTweetSendShare
Previous Post

இந்திய அணியின் அடுத்தப் பயிற்சியாளர் யார்?

Next Post

இது என்ன கணக்கு சேகர் பாபு? – ஹெச்.ராஜா கேள்வி

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies