இளைஞர்களின் கனவை சிதைத்த காங்கிரஸ்: பிரதமர் மோடி தாக்கு!
Apr 29, 2026, 11:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இளைஞர்களின் கனவை சிதைத்த காங்கிரஸ்: பிரதமர் மோடி தாக்கு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 22, 2023, 05:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சியால் இளைஞர்களின் கனவுகள் சிதைந்து விட்டன என்று குற்றம்சாட்டினார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால், இரு கட்சிகளின் தலைவர்களும் ராஜஸ்தானில் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சியால் இளைஞர்களின் கனவுகள் சிதைந்து விட்டன. ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசு, அரசு பணி நியமனங்கள் அனைத்திலும் ஊழல் செய்துள்ளது. இது உங்கள் பிள்ளைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி.

இந்த மோசமான காங்கிரஸ் அரசை மாற்ற ஜனநாயகம் உங்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறது. சில சமயங்களில் சிறு தவறும் உங்களை 5 ஆண்டுகள் துன்பத்தில் ஆழ்த்தலாம். மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களையும் வேகமாக செயல்படுத்த ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசை விரட்டுவது முக்கியம்.

காங்கிரஸின் நம்பிக்கை எங்கிருந்து முடிகிறதோ, அங்கிருந்துதான் மோடியின் உத்தரவாதங்கள் தொடங்குகின்றன. நம் நாட்டில் கோடிக்கணக்கான ஆதிவாசிகளுக்கு காங்கிரஸ் ஒருபோதும் உதவவில்லை. ஆனால், பா.ஜ.க. அவர்களுக்கென தனி அமைச்சகத்தை உருவாக்கி, ஆதிவாசிகளின் நலனுக்கான பட்ஜெட்டை அதிகப்படுத்தியது.

ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் பெட்ரோல், டீசல் விலையை மறு ஆய்வு செய்து மக்கள் நலனுக்கான முடிவுகள் எடுக்கப்படும். ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு அதிகாரிகளை ஏமாற்றி இருருக்கிறது.

அரசு அதிகாரிகளின் பணம் மாதக்கணக்கில் அரசிடம் தேங்கிக் கிடக்கிறது. இது தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை” என்றார்.

Tags: CompaignPM ModiElectionRajasthan
ShareTweetSendShare
Previous Post

வாழ்க்கை மதிப்புகளை நன்னெறிக் கல்வி நமக்கு உணர்த்துகிறது! – குடியரசுத் தலைவர்

Next Post

புகார் எதிரொலி: 15 பேர் காத்திப்போர் பட்டியலுக்கு மாற்றம் – சென்னை போலீஸ் ஆணையா் அதிரடி

Related News

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies