மதுரை அழகர் கோவில் மகா கும்பாபிஷேகம்!
Apr 29, 2026, 11:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை அழகர் கோவில் மகா கும்பாபிஷேகம்!

Murugesan M by Murugesan M
Nov 23, 2023, 11:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையிலிருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அருள்மிகு அழகர் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் மிகவும் புகழ் பெற்ற தலமாகும்.

அழகர் கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி, 2 கோடி ரூபாய் செலவில் ராஜகோபுரம் புதுப்பிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாகப் பராமரிப்புப் பணிகள் நடந்து வந்தன.

தீர்த்த குடங்கள் எடுத்துச் செல்ல மூங்கில் கட்டும் பணியும் முடிவடைந்த நிலையில், முகூர்த்தக்கால் நடப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை கடந்த 21-ம் தேதி தொடங்கியது.

கும்பாபிஷேகத்துக்காக அங்குள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வாஸ்து சாந்தி பூஜையுடன், யாகச் சாலை பூஜைகள் தொடங்கப்பட்டன.

மூலவர் சன்னதியில் பூஜை செய்யப்பட்ட நூபுர கங்கை தீர்த்தக்குடங்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. திருக்கோவில் யானை சுந்தரவல்லி முன்னே செல்ல பட்டர்கள் ஊர்வலமாக யாகசாலைக்குத் தீர்த்தக்குடங்களை எடுத்துச் சென்றனர்.

யாக சாலையில் 8 யாகக் குண்டங்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்தன. அங்கு 160 புனித தீர்த்த கலசங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் கள்ளழகர் திருக்கோவில் சுந்தர நாராயண அம்பி பட்டர் தலைமையில் 40 -க்கும் மேற்பட்ட பட்டர்கள் கலந்து கொண்டு யாகசாலை பூஜைகளைத் தொடங்கினர். வேத மந்திரங்கள் ஒலிக்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இந்த நிலையில், இன்று காலை யாகக் குண்டங்களில் இருந்து தீர்த்த கலசங்கள் எடுத்துச் செல்லப்பட்டு ராஜகோபுரத்தில் உள்ள கும்பங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கும்பாபிஷேகம் செய்ய நீர், 15 இடங்களில் சுழல் கருவி மூலம் பக்தர்களுக்குத் தெளிக்கப்பட்டது. அப்போது, பக்தர்கள், கோவிந்தா கோவிந்தா என விண்ணைப் பிளக்க பக்தி முழக்கமிட்டனர்.

அழகர் கோவிலில் கடந்த 2011 ஆம் ஆண்டு இங்குக் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: madurai alagar temple
ShareTweetSendShare
Previous Post

உத்தரகாசி சுரங்கப்பாதை: இறுதிக் கட்டத்தில் மீட்புப் பணி!

Next Post

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா!

Related News

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies