மும்பை தாக்குதல் நினைவு தினம்: குடியரசுத் தலைவர், ராஜ்நாத் சிங் அஞ்சலி!
Sep 12, 2026, 10:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பை தாக்குதல் நினைவு தினம்: குடியரசுத் தலைவர், ராஜ்நாத் சிங் அஞ்சலி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 26, 2023, 07:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2008-ம் ஆண்டு நடந்த மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்.

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி, பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 10 பேர் கடல் வழியாக மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்குள் நுழைந்தனர்.

சத்ரபதி சிவாஜி மஹராஜ் இரயில் நிலையம், ஓபராய் ஓட்டல், தாஜ் மஹால் ஓட்டல், லியோ கபே, காமா மருத்துவமனை, யூதர்கள் சமுதாய மையம் ஆகிய இடங்களில் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இத்தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 18 பேர், வெளிநாட்டினர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். பின்னர், தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே 60 மணி நேர சண்டையில், தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே, ராணுவ மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன், மும்பை கூடுதல் கமிஷனர் அசோக் காம்தே, இன்ஸ்பெக்டர் விஜய் சலாஸ்கர், உதவி எஸ்.ஐ., துக்காராம் ஓம்லே உள்ளிட்டோர் வீர மரணம் அடைந்தனர்.

மேலும், தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் கடந்த 2012-ம் ஆண்டு துாக்கிலிடப்பட்டான்.

இத்தாக்குதல் சம்பவத்தின் 15-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மும்பை நகரின் முக்கிய வீதிகளில் வீர மரணமடைந்த பாதுகாப்புப் படையினரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு பொதுமக்கள் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல, தெற்கு மும்பையின் போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்திலுள்ள நினைவிடத்தில், மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஆளுநர் ரமேஷ் பாய்ஸ் மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் உள்ளிட்ட அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், மும்பை தீவிரவாதத் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அஞ்சலி செலுத்தினார்.

இது குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவரையும் நம் தேசம் வலியுடன் நினைவு கூர்கிறது. வீர ஆன்மாக்களை கௌரவிப்பதில், நாம் இறந்தவர்களின் குடும்பங்களோடு துணை நிற்கிறோம்.

தாய் மண்ணுக்காக உயிர்நீத்த வீரம் மிகுந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் ஒப்பற்ற தியாகத்தை நினைவு கூர்கிறேன். எந்தவொரு பகுதியிலும், அனைத்துவித தீவிரவாதத்தையும் எதிர்கொண்டு போரிடுவதாக, நாம் எடுத்துக்கொண்ட சபதத்தை அனைவரும் மீண்டும் புதுப்பிப்போம்” என்று தெரிவித்திருக்கிறார்.

A grateful nation remembers with pain all the victims of the 26/11 Mumbai terror attacks. We stand with their families and loved ones in honouring the memory of the brave souls. I pay homage to the valiant security personnel who laid down their lives for the motherland. Recalling…

— President of India (@rashtrapatibhvn) November 26, 2023

 

அதேபோல, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டிருக்கும் பதிவில், “மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். கடமையின்போது உயிர்த் தியாகம் செய்த பாதுகாப்பு வீரர்களின் தியாகத்தை தேசம் எப்போதும் நினைவு கூரும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

My heartfelt tributes to the victims of the 26/11 #MumbaiTerrorAttacks. The nation will always remember the sacrifice of those security personnel who gave their lives in the line of duty.

— Rajnath Singh (@rajnathsingh) November 26, 2023

Tags: President Droupadi Murmudefence minister rajnath singhMumbai Attack15th-anniversary
Share
Tweet
SendShare
Previous Post

ரூ.70 லட்சம் மோசடி செய்த திமுக நிர்வாகி!

Next Post

வெளிநாடுகளில் திருமணம்: பிரதமர் மோடி சொன்னது என்ன?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies