மணிப்பூர்: ஆயுதக் குழுவுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து... அமித்ஷா வரவேற்பு!
Jul 29, 2026, 09:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூர்: ஆயுதக் குழுவுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து… அமித்ஷா வரவேற்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 29, 2023, 07:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூரில் பழமையான ஆயுதக்குழுவான ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (யு.என்.எல்.எஃப்) அமைப்புடன் இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு வரவேற்புத் தெரிவித்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இது வரலாற்று மைல்கல் என்று தெரிவித்திருக்கிறார்.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 3-ம் தேதி முதல் மெயிட்டி மற்றும் கூகி சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக வெடித்த நிலையில், கடந்த 7 மாதங்களில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட, ஆயுதக் குழுக்களுடன் மத்திய, மாநில அரசுகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்டியளித்த மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங், “ஒரு பெரிய புரட்சிக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. விரைவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், மணிப்பூரைச் சேர்ந்த பழமையான ஆயுதக் குழுவான ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (யு.என்.எல்.எஃப்.) அமைப்புடன் இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இதையடுத்து, ஆயுதக் குழுவினர் தங்களது ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்தனர்.

இதைத் தொடர்ந்து, மேற்கண்ட நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்புத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஒரு வரலாற்று மைல்கல் எட்டப்பட்டிருக்கிறது!

வடகிழக்கில் நிரந்தர அமைதியை நிலைநாட்ட மோடி அரசின் இடைவிடாத முயற்சியின் பலனாக, ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி இன்று புதுடெல்லியில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. இதன் மூலம் புதிய அத்தியாயம் எட்டப்பட்டிருக்கிறது.

மணிப்பூரின் பழமையான பள்ளத்தாக்கு அடிப்படையிலான ஆயுதக் குழுவான யு.என்.எல்.எஃப். வன்முறையைத் துறந்து பிரதான நீரோட்டத்தில் இணைய ஒப்புக்கொண்டிருக்கிறது.

அவர்களை ஜனநாயக செயல்முறைகளுக்கு நான் வரவேற்கிறேன். அமைதி மற்றும் முன்னேற்றப் பாதையிலான அவர்களின் பயணத்திற்கு நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

மற்றொரு பதிவில், “வடகிழக்கில் அமைதியை நிலைநாட்ட நரேந்திர மோடி அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. மேலும், நாட்டின் தலைமைப் பொறுப்பில் மோடி இருக்கும் வரை, தேச விரோத சக்திகளால் இந்தியாவுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இந்திய அரசும் மணிப்பூர் அரசும் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணியுடன் இன்று கையெழுத்திட்ட அமைதி ஒப்பந்தம், 6 தசாப்த கால ஆயுத இயக்கத்தின் முடிவைக் குறிக்கிறது. இது பிரதமர் மோடியின் ஒரு முக்கிய சாதனையாகும்.

அனைவரையும் உள்ளடக்கிய இந்த வளர்ச்சி, வடகிழக்கு இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதற்கான மோடியின் பார்வை” என்று கூறியிருக்கிறார்.

அதேபோல, முதல்வர் பைரேன் சிங் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “மணிப்பூரின் மிகப் பழமையான ஆயுதக் குழு, வன்முறையைக் கைவிட்டு அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுத்து, பிரதான நீரோட்டத்தில் சேரவும், ஜனநாயகத்தைத் தழுவவும் முடிவு செய்திருக்கிறது.

ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF) புதுடெல்லியில் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. இது வடகிழக்கில் நிரந்தர அமைதிக்கான எங்கள் இடைவிடாத முயற்சியில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

பிரகாசமான மற்றும் அமைதியான வடக்கு கிழக்கிற்கு பிரதமர் நரேந்திர மோடியின் அசைக்க முடியாத ஆதரவும் தொலைநோக்கு பார்வையும்தான் இதை சாத்தியமாக்கி இருக்கிறது. இந்த கூட்டு முயற்சி மணிப்பூர் மற்றும் முழு பிராந்தியத்திற்கும் இணக்கமான மற்றும் வளமான எதிர்காலத்திற்கு பங்களிக்கட்டும்” என்று கூறியிருக்கிறார்.

 

The peace agreement signed today with the UNLF by the Government of India and the Government of Manipur marks the end of a six-decade-long armed movement.

It is a landmark achievement in realising PM @narendramodi Ji's vision of all-inclusive development and providing a better… pic.twitter.com/P2TUyfNqq1

— Amit Shah (@AmitShah) November 29, 2023

 

Tags: manipurUNLFPeace agreement
ShareTweetSendShare
Previous Post

பாரத் கௌரவ் யாத்ரா ரயில் பயணிகளுக்கு ஐஆர்சிடிசி உணவு வழங்கவில்லை!

Next Post

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies