30 ஆண்டுகளுக்குள் பொருளாதாரத்தில் 30 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை சேர்க்கும்!
Sep 12, 2026, 10:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

30 ஆண்டுகளுக்குள் பொருளாதாரத்தில் 30 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை சேர்க்கும்!

- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

Murugesan M by Murugesan M
Dec 1, 2023, 07:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

30-ன் சக்தி இந்தியாவை இயக்குகிறது – 30 ஆண்டுகளுக்குள் பொருளாதாரத்தில் 30 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை சேர்க்கும் கனவு என  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

30 வயதிற்கு உட்பட்டவர்களின் முயற்சியால் 30 ஆண்டுகளுக்குள் நமது பொருளாதாரத்தில் 30 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை சேர்க்கும் கனவு இன்று இந்தியாவை இயக்குகிறது. இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் பஹ்ரைன் கிளை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் இன்று உரையாற்றிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இதனைத் தெரிவித்தார்.

முதலீட்டாளர்களுக்கு இந்தியா ஓர் உலகளாவிய பிரகாசமான இடமாகும். அங்கு நமது சந்தை மூலதனம் 2 நாட்களுக்கு முன் 4 டிரில்லியன் டாலரைத் தொட்டுள்ளது என்று கூறினார்.

உலக நாடுகளுடன் ஈடுஇணையற்ற, அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இந்தியா செயல்படுகிறது. ஆணவத்துடன் அல்ல என சுட்டிக்காட்டினார். இந்தியா 10 ஆண்டுகளில் துறைமுகத் திறன் இரட்டிப்பாக்கப்பட்ட ஒரு பொருளாதாரமாகும்.

அங்கு வணிக விமான நிலையங்கள் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 74-ல் இருந்து 150 ஆக இரட்டிப்பாகியுள்ளன. மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 225 ஆக மேலும் வளரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கு நவீன உயர்தர ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைகளின் பெரிய கட்டமைப்புக்குத்  துணையாக 140 புதிய உள்நாட்டு நீர்வழிகள் தொடங்கப்பட்டுள்ளன. உலகின் பிற பகுதிகளில் நாம் காணும் அழகான உள்கட்டமைப்பு இப்போது இந்தியாவில் உருவாக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

பார்வையாளர்கள் தில்லியில் வந்து புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைப் பார்க்க வேண்டும் அல்லது உயர்தர சர்வதேசக் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரத் மண்டபத்தைப் பார்வையிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

வளமான, துடிப்பான பொருளாதாரம், இந்திய மக்களை கவனித்து, அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை வழங்கும் ஓர் அமைப்பு, எளிதான வாழ்க்கை வாய்ப்புகளுடன் கூடிய வாழ்க்கைத் தரம் ஆகியவற்றைக் காணுமாறு அவர் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

வளர்ச்சி, நல்ல நிர்வாகம், மன உறுதி, உண்மையான நம்பிக்கை, நிலைத்தன்மையைப் பிரதிபலிக்கும் பசுமைத் தொழில்நுட்பங்கள் ஆகிய 5 ஜி திட்டங்களில் இந்தியா இன்று முன்னணியில் உள்ளது என்று பிரதமர் கூறினார்.

450-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பஹ்ரைனில் உள்ள இந்தியர்களின் மிகப்பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்முறை அமைப்பாக பட்டயக் கணக்காளர்கள் உள்ளனர் என்று கூறினார்.

பஹ்ரைனின் வளர்ச்சியில் அவர்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள், உயர்ந்த நேர்மை, உயர்ந்த ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றில் அவர்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவர் கூறினார்.

பட்டயக் கணக்காளர்கள் உலகெங்கிலும் பஹ்ரைனிலும் இந்தியாவின் தூதர்களாக உள்ளனர் என்று  கூறினார். அவர்கள் செய்யும் அற்புதமான பணிகளுக்காகவும்,  அவர்களின் பங்களிப்பிற்காகவும் அவர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், பஹ்ரைனுக்கான நமது தூதர்கள் என்ற முறையில், அவர்கள் தங்கள் அர்ப்பணிப்பு, ஒருமைப்பாடு, கடின உழைப்பு மற்றும் ஆர்வத்தால் இந்தியாவை பெருமைப்படுத்துகிறார்கள் என்றார்.

தலைமைத்துவம், நிலைத்தன்மை, புவிசார் அரசியல், மனித ஆற்றல், ஆரோக்கியமான வாழ்க்கை – சமகால விஷயங்கள் மற்றும் அவசியமான விஷயங்கள் குறித்த விவாதத்தை ஏற்பாடு செய்ததற்காக அவர்களைப் பாராட்டினார்.

Tags: Union Minister Piyush Goyal
Share
Tweet
SendShare
Previous Post

2028இல் இந்தியாவில் பருவ நிலை உச்சி மாநாடு : பிரதமர் மோடி ஆர்வம்!

Next Post

இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 : இந்தியா பேட்டிங்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies