பிப்ரவரி 1 இடைக்கால பட்ஜெட் எப்படி இருக்கும்: நிர்மலா சீதாராமன் விளக்கம்!
Jul 29, 2026, 02:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிப்ரவரி 1 இடைக்கால பட்ஜெட் எப்படி இருக்கும்: நிர்மலா சீதாராமன் விளக்கம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 7, 2023, 05:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 பிப்ரவரி 1-ம் தேதி சமர்ப்பிக்கப்படும் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் எவ்வித புதிய அறிவிப்பும் இருக்காது. மே மாதம் நடைபெறும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 1-ம் தேதி, நாடாளுமன்றத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் சமர்பிப்பதும், விவாதங்கள் மற்றும் அவையின் ஏற்புக்குப் பிறகு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதும் வழக்கம். அந்த வகையில், 2024 பிப்ரவரி மாதம் 1-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கிறார்.

இந்த நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள இடைக்கால நிதிநிலை அறிக்கையில் என்ன இருக்கும் என்பது குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்திருக்கிறார். டெல்லியில் நடந்த சி.ஐ.ஐ. சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்ட நிர்மலா சீதாராமன் கூறுகையில், “2024-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

ஆகவே, பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படும் இடைக்கால நிதிநிலை அறிக்கை புதிய வரிவிதிப்பின்றி அறிவிக்கப்படும். இதில் அடுத்த ஆண்டு அமையவிருக்கும் அரசு எதிர்கொள்ளவிருக்கும் செலவினங்கள் மட்டுமே பட்டியலிடப்படும்.

2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலை நாடு எதிர்நோக்கி இருக்கிறது. ஆகவே, 2024-25 நிதிநிலை அறிக்கையில் வேறு எந்தவித புதிய அறிவிப்பும் வெளியாகாது. புதிய அரசாங்கம் வந்து ஜூலை 2024-ல் அடுத்த முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

கணக்கு வாக்கெடுப்பு என்று அறியப்படும் இடைக்கால பட்ஜெட், பொதுத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை, தற்போதைய அரசாங்கம் செலவினங்களை மேற்கொள்ள அனுமதிக்கும். ஆகவே, இந்த நிதிநிலை அறிக்கையில் புதிய வரி விதிப்புகள், செலவுத் திட்டங்கள் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Nirmala seetharam2024 BudgetCII
ShareTweetSendShare
Previous Post

மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண பணியில் சேவா பாரதி தமிழ்நாடு!

Next Post

பாஜக நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கூட்டம்!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies