விடியல் இருக்கும் என்றார்கள், தண்ணீர் வடிய கூட இல்லையே..: தமிழிசை சவுந்தரராஜன்
Sep 13, 2026, 01:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விடியல் இருக்கும் என்றார்கள், தண்ணீர் வடிய கூட இல்லையே..: தமிழிசை சவுந்தரராஜன்

Murugesan M by Murugesan M
Dec 9, 2023, 01:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை வெள்ள பாதிப்பு குறித்து தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

“இது மழையின் தண்ணீர் கவிதையல்ல….

இது மக்களின் கண்ணீர் கவிதை….

என்னை….

உன்னை…. வளர்த்த சென்னை… வெள்ளத்தில் தத்தளிக்கிறது

மழை நின்ற பின்பும் தண்ணீர் வடியவில்லை…

மக்களின் கண்ணீர் வற்றவில்லை….

விடியல் இருக்கும் என்றார்கள்….

தண்ணீர் வடிய கூட இல்லையே….

அவகாசம் இல்லை என்று சாவகாசமாய் சொல்கிறார்கள்…

இன்றா இவர்களிடம் சென்னை இருக்கிறது…

அன்றே மேயராக சென்னையில் இருந்தவர்கள் தானே?

சிங்கப்பூராக ஆக்குகிறோம் என்றார்கள்…

பூராக தண்ணீர் வடியும் ஊராக கூட ஆக்கவில்லையே….

பம்பு வைத்து தண்ணீர் எடுக்கலையே….

பாம்பு ஊர்ந்து வருவதை தடுக்கலையே….

கூவத்தில் படகு விடுவோம் என்றார்கள்….

இன்று சென்னையே கூவமாக மாற்றி படகு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்…

குழிக்குள்ளும், புதருக்குள்ளும் மனித உடல்கள்….

பழிக்குள்ளாக்குகிறார்கள் இன்றைய மழையை….

பள்ளம் தோண்டி வடிகால் இடுகிறோம் என்றார்கள்….

ஆனால் விடிவு காலம் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்….

தண்ணீர் வடியும் காலம் தெரியாமல் பரிதவிக்கிறார்கள்….

பாலுக்கு அழும் குழந்தையை பார்த்திருக்கிறோம்….

இன்று பாலுக்காக குடும்பங்களே அழுவதை பார்த்து பரிதவிக்கிறோம்….

பொருளை இழந்து வாடும் மக்களுக்கு மீண்டும் பொருள் கிடைக்க அருளைக்கொடு….

இன்று இந்தக் கொடுமையை தாங்கும் பலத்தை கொடு….

பின்பு மழையை தாங்கும் கட்டமைப்பை கொடு….

ஆண்டு கொண்டிருப்பவர் செய்ய தவறியதால்….

ஆண்டவனே உன்னை வேண்டுகிறேன்….

கூப்பிடு தூரத்தில் நான் இருந்திருந்தால்….

துயர் துடைக்க முடியவில்லை என்றாலும்….

கண்ணீர் துடைக்கவாது ஓடோடி வந்திருப்பேன்….

அன்று வந்தது போல் படகோடவாது வந்திருப்பேன்….

நம் மாநில மழைக்காட்சி கண்டாலும்….

பணி மாநில ஆட்சிப்பணி இருப்பதால்….

தூரத்தில் இருந்தே உங்கள் துயரத்தில் பங்கெடுக்கிறேன்….

தொலைவில் இருந்தாலும் மழை வடியும் தொலைநோக்கு திட்டத்தை திட்டமிட

வேண்டுமென்ற வேண்டுகோளோடு.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது மழையின் தண்ணீர் கவிதையல்ல….

இது மக்களின் கண்ணீர் கவிதை….#ChennaiRain pic.twitter.com/JlG3hZdMjw

— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) December 8, 2023

Tags: tamilasai soundrarajanrain updatechennai rains
Share
Tweet
SendShare
Previous Post

அப்பா எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க : போலி சுங்கச்சாவடி அமைத்து மோசடி!

Next Post

வெளி மாநிலத்தில் இருந்து பால் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies