பிணைக் கைதிகள் உயிருடன் திரும்ப மாட்டார்கள்: ஹமாஸ் மிரட்டல்!
Apr 29, 2026, 11:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிணைக் கைதிகள் உயிருடன் திரும்ப மாட்டார்கள்: ஹமாஸ் மிரட்டல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 11, 2023, 01:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஸா நகரின் மீது இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பிணைக் கைதிகள் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்திருக்கிறார்கள்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அதோடு, இஸ்ரேலுக்கு சுற்றுலா வந்திருந்த வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய இத்தாக்குதலில் இஸ்ரேலில் 1,400 பேர் உயிரிழந்தனர். மேலும், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. முப்படைகளையும் ஏவிவிட்டு இஸ்ரேல் நடத்திய அசுரத் தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய் விட்டது. ஹமாஸ் தீவிரவாதிகளும், காஸா நகர மக்களும் கொத்துக் கொத்தாக செத்து மடிந்தனர்.

இதையடுத்து, போரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. உட்பட உலக நாடுகள் பலரும் இஸ்ரேலை வலியுறுத்தன. ஆனால், அனைவரின் கோரிக்கையையும் இஸ்ரேல் நிராகரித்து விட்டது. தங்களது நாட்டு பிரஜைகளை கொன்று குவித்த ஹமாஸ் தீவிரவாதிகளை வேரோடு அழிக்கும் வரை போர் ஓயாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

இதனிடையே, போரால் பாதிக்கப்பட்ட காஸா நகர மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கச் செய்யவும், ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்துச் சென்ற பிணைக் கைதிகளை விடுவிக்கவும், கத்தார் நாட்டு உதவியுடன் அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது.

இதன் பயனாக, 7 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டு,  105 பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இன்னும் 100-க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் ஹமாஸ் பிடியில் இருக்கிறார்கள். இந்த சூழலில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், மீண்டும் தாக்குதலைத் தொடங்கி இருக்கிறது. ஏற்கெனவே, வடக்கு காஸா நகரம் உருக்குலைந்து கிடக்கும் நிலையில், தற்போது தெற்கு காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 18,000 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருப்பதாக காஸா நகர சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில்தான், எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாத வரை பிணைக் கைதிகள் யாரும் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என்று ஹமாஸ் தீவிரவாதிகளின் ஆயுதப்பிரிவு செய்தித் தொடர்பாளர் அபு ஒபையா மிரட்டல் விடுத்திருக்கிறார்.

எனினும், ஹமாஸ் தீவிரவாதிகளின் எச்சரிக்கையை ஒதுக்கிவிட்டு, காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து குண்டுகளை வீசி வருகிறது. இதனிடையே, காஸாவில் புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கொண்டு வருவதற்கும், பிணைக் கைதிகளை விடுவிப்பதற்குமான முயற்சியில் கத்தார் நாடு ஈடுபட்டிருக்கிறது.

Tags: IsraelHamasThreaten
ShareTweetSendShare
Previous Post

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற அண்ணாமலை!

Next Post

கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம்- பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies