செங்கல்பட்டு சரக்கு இரயில் விபத்து - காரணம் இதுதான்!
Sep 13, 2026, 03:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செங்கல்பட்டு சரக்கு இரயில் விபத்து – காரணம் இதுதான்!

Murugesan M by Murugesan M
Dec 11, 2023, 01:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகின் மிகப் பெரிய சேவை நிறுவனம் இந்தியன் இரயில்வே துறை ஆகும். கடந்த 130 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறது. இதில், சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். பயணிகள் நலனை கருத்தில் கொண்டு பயணிகள் இரயிலும், பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்ல, சரக்கு இரயிலும் நாடு முழுவதும் இயக்கப்படுகிறது.

இந்நிலையில்தான், செங்கல்பட்டு இரயில் நிலையம் அருகே சரக்கு இரயிலின் 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற சரக்கு இரயில் காவல் நிலைய இரயில்வே கேட் பகுதியில் தடம் புரண்டது.

இதையடுத்து, சரக்கு இரயில் உடனே நிறுத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

தடம் புரண்ட சரக்கு இரயிலின் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியிலும், தண்டவாளத்தைச் சீர் செய்யும் பணியிலும் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், இயந்திரங்களின் உதவியோடு ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காலை முதல் கடந்த 4 மணி நேரமாக செங்கல்பட்டில் புறநகர் இரயில்கள் இயங்காததால், பள்ளி, கல்லூரிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

திருமால்பூரில் இருந்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு வழியாகச் சென்னை கடற்கரை செல்லும் ஒரு இரயில் மட்டுமே வந்ததால், அந்த இரயிலில் ஆபத்தான முறையில் பயணிகள் பயணம் செய்தனர்.

42 பெட்டிகளுடன் சென்ற சரக்கு இரயிலின் பாரம் தாங்காமல் 10 பெட்டிகளின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில்தான், விபத்துக்கான முழு காரணமும் தெரியவரும்.

Tags: chegalpattugoods train derilsGoods wagon derailssuburban train services
Share
Tweet
SendShare
Previous Post

கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம்- பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம்!

Next Post

வால்பாறையில் தொடரும் புலிகள் நடமாட்டம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies