என் மீது தாக்குதல் நடத்தி கேரள முதல்வர் சதி: ஆளுநர் பகிரங்க குற்றச்சாட்டு!
Sep 14, 2026, 04:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என் மீது தாக்குதல் நடத்தி கேரள முதல்வர் சதி: ஆளுநர் பகிரங்க குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 12, 2023, 04:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரளாவில் ஆளுநர் ஆரிஃப் கான் வாகனத்தின் மீது எஸ்.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், தன் மீது தாக்குதல் நடத்த முதல்வர் பினராயி விஜயன் சதி செய்திருப்பதாக ஆளுநர் குற்றம்சாட்டி இருக்கிறார்.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயனுக்கும், ஆளுநர் ஆரிஃப் கானுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. மாநில அரசின் அவசரச் சட்டங்களில் கையெழுத்திடாமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இந்த சூழலில், ஆளுநர் சென்ற வாகனத்தின் மீது மா.கம்யூ. கட்சியின் எஸ்.எஃப்.ஐ. அமைப்பினர் தாக்குதல் நடத்தி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விஷயம் இதுதான்… கேரள ஆளுநர் ஆரிஃப் கான் விமான நிலையம் செல்வதற்காக ஆளுநர் மாளிகையிலிருந்து காரில் புறப்பட்டார். கார் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வழிமறித்த ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாணவர்கள் அமைப்புத் (எஸ்.எஃப்.ஐ.) தொண்டர்கள், ஆளுநருக்கு கருப்புக் கொடி காண்பித்தனர். மேலும், கார் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆளுநர் ஆரிப் கான், “எனக்கு உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். இச்சம்பவம் தற்செயலான சம்பவம் அல்ல. வேண்டுமென்றே என்னை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்.

என்னை உடல் ரீதியாக காயப்படுத்த சதி செய்து இவர்களை அனுப்புவது முதல்வர் பினராயி விஜயன் தான். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்னை நோக்கி கருப்புக் கொடியை காட்டியது மட்டுமல்லாமல், காரின் இருபுறத்திலும் தாக்கினர். அரசியலில் கருத்து வேறுபாடு உடல் ரீதியான வன்முறைக்கு வழிவகுக்கக் கூடாது.

எனது காரை போராட்டக்காரர்கள் சூழ்ந்து கருப்புக் கொடி காட்டியதோடு வாகனத்தையும் தாக்கினர். முதல்வர் நிகழ்ச்சியில் இதுபோன்று போராட்டக்காரர்கள் அனுமதிக்கப்படுவார்களா? முதல்வரின் கார் அருகே யாரேனும் வர இயலுமா? அதற்கு காவல்துறை அனுமதிக்குமா? ஆனால், எனது கார் சென்ற வழியில் போராட்டக்காரர்கள் இருந்தனர். கருப்புக் கொடி காட்டினர், முற்றுகையிட்டனர், காரை தாக்கினர்.

உடனே போலீஸார் அவசர அவசரமாக அவர்களை அங்கிருந்த கார்களுக்குள் தள்ளினார்கள். அவ்வளவுதான் அவர்கள் அங்கிருந்து கார்களில் பறந்து விட்டனர். அதனால்தான் சொல்கிறேன் இது நிச்சயமாக பினராயி விஜயனின் சதி என்று. அவர்தான் என்னைத் தாக்க ஆட்களை அனுப்பியுள்ளார். திருவனந்தபுரம் சாலைகளை குண்டர்கள் ஆக்கிரமித்துள்ளனர்” என்றார்.

இதனிடையே, ஆளுநர் ஆரிஃப் கான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்குச் செல்லும் பாதை குறித்த விபரங்கள் எப்படி லீக்கானது? கவர்னர் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது எப்படி என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதேசமயம், உளவுத்துறையினரிடம் இருந்து தகவல் வெளியாகி ஆளுநர் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Tags: KeralaattackGovernorSFI
Share
Tweet
SendShare
Previous Post

நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு நிலைநாட்டப்பட்டிருக்கிறது: பிரதமர் மோடி!

Next Post

ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் அட்டவணை!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies