ஹபீஸ் சயீதை ஒப்படைக்க வேண்டும்: பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தல்!
Sep 12, 2026, 08:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹபீஸ் சயீதை ஒப்படைக்க வேண்டும்: பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 28, 2023, 05:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மும்பைத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதத் தலைவன் ஹபீஸ் சயீத், பாகிஸ்தான் அரசியலில் குதிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், ஹபீஸ் சயீதை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசு பாகிஸ்தான் அரசிடம் வலியுறுத்தி இருக்கிறது.

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி, இந்தியாவின் நிதி மையமாகவும், நுழைவு வாயிலாகவும் விளங்கும் மும்பைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள், மிகப்பெரிய தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 164 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்த கொடூரத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவன் ஹபீஸ் சயீத். லஷ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத அமைப்பை நிறுவியவன் இவன்தான். இவனைப் பிடிக்க இந்தியா நீண்ட காலமாகப் போராடி வருகிறது. அதேபோல, அமெரிக்காவும் இவனது தலைக்கு 83 கோடி ரூபாய் நிர்ணயித்திருக்கிறது. ஆனால், ஹபீஸ் சயீத் தற்போது வரை பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறான்.

மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு, சர்வதேச நாடுகளின் நெருக்கடி காரணமாக, தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டியதாகக் கூறி, இவனை பாகிஸ்தான் அரசு கைது செய்தது. ஆனால், இப்படி அவன் அடிக்கடி கைது செய்யப்படுவதும், பின்னர் விடுவிக்கப்படுவதும் வழக்கமாகி விட்டது. எனவே, இவனை எப்படியாவது இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு கடும் முயற்சி எடுத்து வருகிறது.

மேலும், ஹபீஸ் சயீதை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் இந்தியா அதிகாரப்பூர்வமாக கோரிக்கையும் விடுத்திருக்கிறது. இந்த சூழலில், அவனை நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பாகிஸ்தானிடம் வலியுறுத்தி இருக்கிறது.

ஆனால், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே இதுபோன்று குற்றவாளிகளை ஒப்படைக்கும் முறைகள் இல்லாததால் சயீத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சிக்கல்கள் நிலவுகிறது. இதை ஹபீஸ் சயீத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சுதந்திரமாக நடமாடி வருகிறான்.

இதனிடையே, ஹபீஸ் சயீத்தின் மகன் தல்ஹா சயீத், பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் போட்டியிட இருக்கிறான். எனவே, ஹபீஸ் சயீத்தும் அரசியலில் களமிறங்கப் போவதாக செய்திகள் உலா வந்துகொண்டிருக்கின்றன.

ஒருவேளை இவன் அரசியல் களத்தில் குதித்து, தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்துவிட்டால், அவனை இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் பெரும் சிக்கல் ஏற்படும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியிருக்கிறார்கள். எனினும், ஹபீஸ் சயீத் விவகாரத்தில் பாகிஸ்தான் எந்தளவுக்கு ஒத்துழைக்கும் என்பது தெரியவில்லை.

Tags: Mumbai AttackMastermindHafiz Sayeedterrorist
Share
Tweet
SendShare
Previous Post

வட இந்தியாவில் அடர்ந்த மூடுபனி : குளிர்நிலை 6 டிகிரி செல்சியஸ்சாக பதிவு!

Next Post

அயோத்தியில் மதுவிலக்கு – உ.பி அரசு அதிரடி!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies