அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் பெயரில் நன்கொடை மோசடி! 
Jun 15, 2026, 03:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் பெயரில் நன்கொடை மோசடி! 

பக்தர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு விஎச்பி எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Jan 2, 2024, 05:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா எந்த வகையிலும் பணம் வசூலிக்க யாருக்கும் எந்த உரிமையையும் வழங்கவில்லை என்றும், எனவே மோசடி நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக விஸ்வ இந்து பரிஷத் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை  பயன்படுத்தி பக்தர்களை ஏமாற்றும் கிரிமினல் மோசடி நாடு முழுவதும் முளைத்துள்ளதாகவும், மோசடி செய்பவர்கள் கோயிலுக்கு நன்கொடை வசூலிப்பதாகக் கூறி போலி QR குறியீடுகளைப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் குற்றவாளிகள் கோவிலின் பெயரில் நன்கொடை கோரி சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. அபிஷேக் குமார் என அடையாளம் காணப்பட்ட ஒரு மோசடி பேர்வழி, அயோத்தி கோயில் வளர்ச்சிக்காக பல்வேறு ஆன்லைன் குழுக்களில் செய்திகளை வெளியிட்டு, அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு செல்லும் பணத்தைப் பெறுவதற்காக நிதி கோரி வந்ததை விஹெச்பி வெளிப்படுத்தியுள்ளது.

அவன் UPI QR குறியீடுகளை ஃபேஸ்புக் குழுக்களில் ‘ராம் மந்திர் அயோத்தி சந்தா பிரதர்ஷன் கரேன்’ என்ற வரியுடன் பதிவிட்டுள்ளான் என்றும் எச்சரித்துள்ளது. அயோத்தியைச் சேர்ந்த விஹெச்பி உறுப்பினர் ஒருவர் குமாரிடம் தொலைபேசியில் பேசியபோது,  “உங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குங்கள். உங்கள் பெயரும் எண்ணும் டைரியில் குறிப்பிடப்படும். கோவில் கட்டி முடிக்கப்பட்டதும், நீங்கள் அனைவரும் அயோத்திக்கு அழைக்கப்படுவீர்கள் என அவன் கூறியதாக தெரிவித்துள்ளார்.

கோவிலின் கட்டுமானம் மற்றும் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் அறக்கட்டளையான ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் பெயரையும் மோசடி செய்பவர்கள் பக்தர்களிடம் பணம் பெற பயன்படுத்துகின்றனர்.

ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா எந்த வகையிலும் பணம் வசூலிக்க யாருக்கும் எந்த உரிமையையும் வழங்கவில்லை. மேலும் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்பவர்கள் மோசடியான முறையில் மக்களை ஏமாற்ற விரும்புகிறார்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விஎச்பியின் தேசிய செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் தெரிவித்துள்ளார்.

Tags: cybercriminalsVHPayodhya ramar templeDevoteesfake QR codesVishwa Hindu Parishad
ShareTweetSendShare
Previous Post

சபரிமலையில் புதிய நடைமுறை – அதிர்ச்சியில் பக்தர்கள்!

Next Post

ஒரே மாதம் 71 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் க்ளோஸ் – என்ன காரணம்?

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies