ஜனவரி 26-க்கு முன்பு புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்: உள்துறை முடிவு!
Sep 13, 2026, 01:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜனவரி 26-க்கு முன்பு புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்: உள்துறை முடிவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 3, 2024, 04:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதிக்கு முன்னதாகவே, புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிகள் திட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் ஆகிய 3 புதிய மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.

இந்த மசோதாக்கள், விவாதத்துக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. பின்னர், இந்த மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டன. அவருடம் மேற்கண்ட மசோதாக்களுக்கு டிசம்பர் 25-ம் தேதி ஒப்புதல் அளித்தார். ஆகவே, அம்மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில், மேற்கண்ட புதிய 3 சட்டங்களையும் ஜனவரி 26-ம் தேதிக்குள் அமலுக்குக் கொண்டு வர மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ஆகவே, இது தொடர்பாக காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

மேற்கண்ட 3 சட்டங்கள் அறிவிக்கப்பட்டவுடன், போலீஸ் அதிகாரிகள், புலனாய்வாளர்கள் மற்றும் தடயவியல் துறைகளுடன் தொடர்புடையவர்களுக்கு பயிற்சித் திட்டம் தொடங்கும். இப்பயிற்சியானது. இச்சட்டங்களைச் செயல்படுத்துவதை உறுதிசெய்வதற்கும், நியாயமான, நேரக்கட்டுப்பாடு மற்றும் ஆதார அடிப்படையிலான விசாரணை மற்றும் விரைவான விசாரணையை உறுதி செய்வது தொடர்பானதாக இருக்கும்.

இவர்களுக்கு பயிற்சி அளிக்க பல்வேறு துறைகளைச் சேர்ந்த 3,000 அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். இந்த செயல்முறை பயிற்சியாளர்கள் பயிற்சித் திட்டம் என்று அழைக்கப்படும். 9 மாதங்கள் முதல் 1 வருடத்திற்குள் 90 சதவிகிதம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இப்பயிற்சி தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே ஆலோசனை நடத்தி இருப்பதாகவும், இப்பயிற்சி போபால் அகாடமியில் அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தவிர, பெரும்பாலான பதிவுகள் எலெக்ட்ரானிக் அல்லது டிஜிட்டலாக இருக்கும் என்பதால் ஆன்லைன் பொறிமுறையை உறுதி செய்வதற்காக சண்டிகரில் ஒரு மாதிரி அமைப்பு இருக்கும் என்றும் தெரிவிக்கிறார்கள்.

புதிய சட்டங்களின்படி, ஜீரோ எஃப்.ஐ.ஆர்., இ-எஃப்.ஐ.ஆர்., குற்றப்பத்திரிகை ஆகியவை மின்னணு வடிவத்தில் பதிவுகளை உருவாக்குதல் மற்றும் வழங்குதலாகும். அதாவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு டிஜிட்டல் வடிவில் தகவல் வழங்கப்படும். அதேபோல, பாதிக்கப்பட்டவருக்கு 3 ஆண்டுகளுக்குள் நீதி கிடைக்கும்.

மேலும், காவல்துறை அதிகாரிகள் 90 நாட்களுக்குள் டிஜிட்டல் முறையில் தகவல் அளிக்க வேண்டும். தவிர, தடயவியல் சான்றுகள் மீது கவனம் செலுத்தப்படும். குற்றங்கள் நடந்த இடங்களைப் பார்வையிடவும், 7 ஆண்டுகள் அல்லது 7 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்படும் வழக்குகளில் கட்டாயம் வீடியோகிராபி மற்றும் தடயவியல் ஆதாரங்களை சேகரிக்கவும், 900 எஃப்.எஸ்.எல். வேன்கள் அனைத்து காவல் மாவட்டங்களுக்கும் வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணையின்போது, ஆதாரங்களை பதிவு செய்தல், காவல்துறையால் தேடப்படும் அல்லது பறிமுதல் செய்யப்படும் முழு செயல்முறையின் மின்னணு சாதனங்கள் மூலம் வீடியோகிராஃபி, பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் ஆடியோ மற்றும் வீடியோ மின்னணு வழிமுறைகள் மூலம் இச்சட்டங்களின்படி பதிவு செய்யப்படலாம்.

Tags: Ministry of Home Affairsnew criminal justice actsbefore January 26
Share
Tweet
SendShare
Previous Post

அயோத்தியில் கோல்ப் கார் சேவை தொடங்கப்பட்டுள்ளது!

Next Post

சேலத்தில் புதிய பாஜக அலுவலகம் திறப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies