தொடர்ந்து அத்துமீறும் சீனா - அதிகரிக்கும் பதற்றம்!
Sep 12, 2026, 11:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொடர்ந்து அத்துமீறும் சீனா – அதிகரிக்கும் பதற்றம்!

Murugesan M by Murugesan M
Jan 3, 2024, 04:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த 2-ஆம் தேதி தங்கள் நாட்டின் வான் பகுதியில் நான்கு சீன உளவு பலூன்கள் பறந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த 1949-ஆம் ஆண்டு சீனாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்த போது, பல தீவு கூட்டங்களை உள்ளடக்கிய தைவான் தங்களை தனிநாடாக அறிவித்துக் கொண்டது. ஆனால் அதை ஏற்க மறுக்கும் சீனா, தைவான் இப்போதும் தங்கள் நாட்டின் ஒரு பகுதியே என கூறி, சொந்தம் கொண்டாடி வருகிறது.

எனவே, தைவானை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர, சீனா பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக படைபலத்தைப் பயன்படுத்தவும், தயங்க மாட்டோம் என்று தைவானை மிரட்டி வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில், தைவானுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டி வருகிறது. இது சீனாவை ஆத்திரமடைய செய்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2-ஆம் தேதி தங்கள் வான்பகுதியில் 4 சீன பலூன்கள் பறந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

தைவான் விமானப்படைத் தளத்தின் முக்கிய இடமான சிங் சுவான் காங்கின் தென்மேற்கில் மூன்று பலூன்கள் முறையே, 105 கடல் மைல்கள், 160 கடல் மைல்கள் மற்றும் 159 கடல் மைல்கள் தொலைவில் பறந்ததாக கூறப்படுகிறது.

பலூன்கள் பின்னர் பல்வேறு இடங்களில் மறைந்துவிட்டதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பலூன்கள் சீனாவின் உளவு பார்க்கும் பலூனாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஜனவரி 13-ஆம் தேதி தைவான் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், சீனாவின் 4 பலூன்கள் தைவான் வான் பகுதியில் ஊடுருவிய சம்பவம், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு தைவான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், தைவான் இராணுவமும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அமெரிக்க வான்வெளியில் சீனாவின் பலூன் ஒன்று பறந்தது. இது உளவு பார்க்கும் பலூன் என்று கூறி அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Tags: china army
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவில் புதிதாக 602 பேருக்கு கொரோனா பாதிப்பு! – 5 பேர் பலி!

Next Post

அயோத்தியில் கோல்ப் கார் சேவை தொடங்கப்பட்டுள்ளது!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies