உ.பி.யில் ஜனவரி 22-ம் தேதி கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!
Sep 12, 2026, 06:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உ.பி.யில் ஜனவரி 22-ம் தேதி கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 10, 2024, 11:22 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, ஜனவரி 22-ம் தேதி உத்தரப் பிரதேசத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. அன்றையதினம்தான் ஸ்ரீராமரின் குழந்தை சிலை பிரதிஷ்டை செய்யப்படவிருக்கிறது.

இந்த இராமர் கோவிலை உலகளவில் பிரபலப்படுத்த வேண்டும் என்பதில் மத்திய பா.ஜ.க. அரசு உறுதியாக இருக்கிறது. ஆகவே, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எளிதில் வரும் வகையில், அயோத்தியில் 1,450 கோடி ரூபாய் செலவில் புதிதாக சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டிருக்கிறது.

ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில், 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் விமான நிலைய முனையக் கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது. இதன் முகப்பு அயோத்தி இராமர் கோவில் கட்டடக் கலையை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, பழைய இரயில்வே ஸ்டேஷன் 450 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இரயில் நிலையத்துக்கு அயோத்தி தாம் இரயில் நிலையம் என்றும், விமான நிலையத்துக்கு மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் என்றும் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இது தவிர, அயோத்தி நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 11,600 கோடி ரூபாய் செலவில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, சாலைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளும், உள்கட்டமைப்புகளும் சர்வதேசத் தரத்தில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22-ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட வேண்டும். மேலும், அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருக்கிறார்.

Tags: UP CM Yogi AdityanathRam TempleHolidayAyodya
Share
Tweet
SendShare
Previous Post

மேற்கு வங்க அரசிடம் அறிக்கை கேட்கிறது மத்திய உள்துறை அமைச்சகம்!

Next Post

முரசொலி அலுவலகம் குறித்த விசாரணைக்கு திமுக ஒத்துழைக்க வேண்டும்! – அண்ணாமலை

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies