உ.பி.யில் ஜனவரி 22-ம் தேதி கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!
Jul 29, 2026, 12:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உ.பி.யில் ஜனவரி 22-ம் தேதி கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 10, 2024, 11:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, ஜனவரி 22-ம் தேதி உத்தரப் பிரதேசத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. அன்றையதினம்தான் ஸ்ரீராமரின் குழந்தை சிலை பிரதிஷ்டை செய்யப்படவிருக்கிறது.

இந்த இராமர் கோவிலை உலகளவில் பிரபலப்படுத்த வேண்டும் என்பதில் மத்திய பா.ஜ.க. அரசு உறுதியாக இருக்கிறது. ஆகவே, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எளிதில் வரும் வகையில், அயோத்தியில் 1,450 கோடி ரூபாய் செலவில் புதிதாக சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டிருக்கிறது.

ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில், 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் விமான நிலைய முனையக் கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது. இதன் முகப்பு அயோத்தி இராமர் கோவில் கட்டடக் கலையை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, பழைய இரயில்வே ஸ்டேஷன் 450 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இரயில் நிலையத்துக்கு அயோத்தி தாம் இரயில் நிலையம் என்றும், விமான நிலையத்துக்கு மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் என்றும் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இது தவிர, அயோத்தி நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 11,600 கோடி ரூபாய் செலவில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, சாலைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளும், உள்கட்டமைப்புகளும் சர்வதேசத் தரத்தில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22-ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட வேண்டும். மேலும், அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருக்கிறார்.

Tags: UP CM Yogi AdityanathRam TempleHolidayAyodya
ShareTweetSendShare
Previous Post

மேற்கு வங்க அரசிடம் அறிக்கை கேட்கிறது மத்திய உள்துறை அமைச்சகம்!

Next Post

முரசொலி அலுவலகம் குறித்த விசாரணைக்கு திமுக ஒத்துழைக்க வேண்டும்! – அண்ணாமலை

Related News

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies