நாளை ஆயுதப்படை முன்னாள் வீரர்கள் தினம்!
Apr 29, 2026, 05:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாளை ஆயுதப்படை முன்னாள் வீரர்கள் தினம்!

Murugesan M by Murugesan M
Jan 13, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கான்பூர் விமானப்படை தளத்தில் 8 வது ஆயுதப்படை முன்னாள் வீரர்கள் தின கொண்டாட்டம், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை நடக்கிறது.

1947 ஆம் ஆண்டு போரில் படைகளை வெற்றிக்கு வழிநடத்திய இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி பீல்ட் மார்ஷல் கே.எம்.கரியப்பா 1953 ஆம் ஆண்டில் ஜனவரி 14ஆம் தேதி முறைப்படி ஓய்வு பெற்றதால் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14ஆம் தேதி ஆயுதப்படை வீரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நாள் முதன்முதலில் 2016 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது, அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் படைவீரர்களை கௌரவிக்கும் வகையில் இதுபோன்ற கலந்துரையாடல் நிகழ்வுகளை நடத்துவதன் மூலம் இது நினைவுகூரப்படுகிறது.

கான்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் முன்னாள் படைவீரர்கள் பேரணியுடன் கூடிய 8 வது ஆயுதப்படை முன்னாள் வீரர்கள் தின கொண்டாட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்குகிறார். போர் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து, போரில் உயிர் நீத்தவர்களின் உன்னதமான தியாகம் மற்றும் தேசத்திற்காக அர்ப்பணிப்புடன் செய்த சேவைக்கும் மரியாதை செலுத்துகிறார்.

இந்த ஆண்டு, ஸ்ரீநகர், பதான்கோட், தில்லி, கான்பூர், ஆல்வார், ஜோத்பூர், கவுகாத்தி, மும்பை, செகந்திராபாத் மற்றும் கொச்சி ஆகிய நாடு முழுவதும் 10 இடங்களில் முப்படைகளும் இந்த விழாவைக் கொண்டாடுகின்றன.

செகந்திராபாத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட் தலைமை தாங்குகிறார். புதுதில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் விமானப்படை தளபதி மற்றும் கடற்படை தளபதி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

முன்னாள் படைவீரர் தினம் கொண்டாடப்படும் நிகழ்வுகளை  அதிகரிப்பதன் ஒரு பகுதியாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் முதலமைச்சர்கள், துணைநிலை ஆளுநர்கள் இந்த நாளைக் கொண்டாடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வின் போது, முன்னாள் படைவீரர்களுக்கு பதக்கம், நினைவுப்பரிசு, அங்கீகார சான்றிதழ் போன்றவை வழங்கப்படும். கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, முன்னாள் படைவீரர்களை நினைவுகூரும் ‘வி ஃபார் வெட்டரன்ஸ்’ கீதமும் இசைக்கப்படும்.

Tags: Defense Minister Rajnath SinghJanuary 14 : Armed Forces Veterans Day
ShareTweetSendShare
Previous Post

காவலர்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடிய தமிழக டிஜிபி!

Next Post

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு – இருவர் கைது!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies