நாளை ஆயுதப்படை முன்னாள் வீரர்கள் தினம்!
Sep 13, 2026, 01:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாளை ஆயுதப்படை முன்னாள் வீரர்கள் தினம்!

Murugesan M by Murugesan M
Jan 13, 2024, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கான்பூர் விமானப்படை தளத்தில் 8 வது ஆயுதப்படை முன்னாள் வீரர்கள் தின கொண்டாட்டம், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை நடக்கிறது.

1947 ஆம் ஆண்டு போரில் படைகளை வெற்றிக்கு வழிநடத்திய இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி பீல்ட் மார்ஷல் கே.எம்.கரியப்பா 1953 ஆம் ஆண்டில் ஜனவரி 14ஆம் தேதி முறைப்படி ஓய்வு பெற்றதால் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14ஆம் தேதி ஆயுதப்படை வீரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நாள் முதன்முதலில் 2016 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது, அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் படைவீரர்களை கௌரவிக்கும் வகையில் இதுபோன்ற கலந்துரையாடல் நிகழ்வுகளை நடத்துவதன் மூலம் இது நினைவுகூரப்படுகிறது.

கான்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் முன்னாள் படைவீரர்கள் பேரணியுடன் கூடிய 8 வது ஆயுதப்படை முன்னாள் வீரர்கள் தின கொண்டாட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்குகிறார். போர் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து, போரில் உயிர் நீத்தவர்களின் உன்னதமான தியாகம் மற்றும் தேசத்திற்காக அர்ப்பணிப்புடன் செய்த சேவைக்கும் மரியாதை செலுத்துகிறார்.

இந்த ஆண்டு, ஸ்ரீநகர், பதான்கோட், தில்லி, கான்பூர், ஆல்வார், ஜோத்பூர், கவுகாத்தி, மும்பை, செகந்திராபாத் மற்றும் கொச்சி ஆகிய நாடு முழுவதும் 10 இடங்களில் முப்படைகளும் இந்த விழாவைக் கொண்டாடுகின்றன.

செகந்திராபாத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட் தலைமை தாங்குகிறார். புதுதில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் விமானப்படை தளபதி மற்றும் கடற்படை தளபதி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

முன்னாள் படைவீரர் தினம் கொண்டாடப்படும் நிகழ்வுகளை  அதிகரிப்பதன் ஒரு பகுதியாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் முதலமைச்சர்கள், துணைநிலை ஆளுநர்கள் இந்த நாளைக் கொண்டாடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வின் போது, முன்னாள் படைவீரர்களுக்கு பதக்கம், நினைவுப்பரிசு, அங்கீகார சான்றிதழ் போன்றவை வழங்கப்படும். கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, முன்னாள் படைவீரர்களை நினைவுகூரும் ‘வி ஃபார் வெட்டரன்ஸ்’ கீதமும் இசைக்கப்படும்.

Tags: Defense Minister Rajnath SinghJanuary 14 : Armed Forces Veterans Day
Share
Tweet
SendShare
Previous Post

காவலர்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடிய தமிழக டிஜிபி!

Next Post

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு – இருவர் கைது!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies