துடிப்பான வடகிழக்குக்காக பிரதமர் மோடி உழைக்கிறார்: அமித்ஷா பேச்சு!
Sep 12, 2026, 10:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துடிப்பான வடகிழக்குக்காக பிரதமர் மோடி உழைக்கிறார்: அமித்ஷா பேச்சு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 21, 2024, 01:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அஸ்ஸாம் மாநிலத்தில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி அனைத்து சர்ச்சைகளும் மோதல்களும் முடிவுக்கு வந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு துடிப்பான வடகிழக்குக்காக உழைத்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான அமித்ஷா கூறியிருக்கிறார்.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அருப் குமார் தத்தா எழுதிய “அஸ்ஸாமின் பிரேவ்ஹார்ட் லச்சித் பர்புகான்” என்கிற புத்தக வெளியீட்டு விழா கௌகாத்தியில் உள்ள ஸ்ரீமந்தா சங்கர்தேவா சர்வதேச அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான அமித்ஷா புத்தகத்தை வெளியிட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, “பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை நம்புகிறார்.வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அனைத்து சமூகத்தினரின் நலனுக்காக பாடுபடுகிறார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி அனைத்து சர்ச்சைகளும் மோதல்களும் முடிவுக்கு வந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு துடிப்பான வடகிழக்குக்காக உழைத்து வருகிறது பல மொழி பேசுவது நமது நாட்டிற்கு பலவீனத்தை விட பலமாக உள்ளது.

“லச்சித் பர்புகான்” அஸ்ஸாமுக்கு மட்டுமான சின்னம் அல்ல. அவர் ஒரு தேசிய வீரன். அவரது மகத்துவத்தையும், வீரத்தையும் அனைத்து இந்தியர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். அவருக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்.

நம் நாட்டில் உள்ள அனைத்து நூலகங்களிலும் அவரைப் பற்றிய புத்தகங்கள் இருக்க வேண்டும். லச்சித் பர்புகானை ஊக்குவித்து சரியானதை வழங்குவதற்கான முயற்சிக்காக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் முயற்சியை பாராட்டுகிறேன்” என்றார்.

“அஸ்ஸாமின் பிரேவ்ஹார்ட் லச்சித் பர்புகான்” என்கிற புத்தகம் மாநில அரசால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு, அட்டவணைப்படுத்தப்பட்ட 24 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Amit ShahLaunchesBook'Assam's Braveheart Lachit Barphukan'
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடியுடன் நடிகர் அர்ஜூன் சந்திப்பு!

Next Post

மேகாலயா மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies