"ஒரே நாடு ஒரே தேர்தல்": முன்னாள் தலைமை நீதிபதியுடன் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை!
Jul 18, 2026, 03:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“ஒரே நாடு ஒரே தேர்தல்”: முன்னாள் தலைமை நீதிபதியுடன் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 29, 2024, 05:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முன்னாள் தலைமை நீதிபதி உள்ளிட்ட சிலருடன் உயர்மட்டக் குழுவின் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவில் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

இக்குழுவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், மாநிலங்களவை முன்னாள் எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதிக் கமிஷனின் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் சி.காஷ்யம், முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி, மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

இக்குழுவினர் ஏற்கெனவே 3 முறை கூடி ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதித்தது. மேலும், சட்ட வல்லுனர்களுடனும் கலந்தாலோசித்தது. இந்த சூழலில், “ஒரே நாடு ஒரே தேர்தல்” உயர்நிலைக் குழுவின் தலைவர் ராம்நாத் கோவிந்த், புதுடெல்லியில் இந்திய முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த விஷயம் தொடர்பாக, அவர்கள் ஆலோசனைகளை வழங்கியதாக சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், அரசியல் கட்சித் தலைவர்களுடன் தனது கலந்துரையாடலைத் தொடர்ந்த ராம்நாத் கோவிந்த், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் தலைவர் தீபக் பாண்டுரங் தவாலிகருடனும் கலந்துரையாடினார்.

மேலும், உயர்நிலைக் குழுவின் 4-வது கூட்டமும் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநிலங்களவை முன்னாள் எதிர்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதிக் கமிஷன் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் பொதுச்செயலாளர் டாக்டர். சுபாஷ் சி. காஷ்யப், முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி, மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, என்.கே சிங் மற்றும் பிராச்சி மிஸ்ரா இணைந்து எழுதிய ‘தேர்தல் சுழற்சிகளின் மேக்ரோ எகனாமிக் இம்பாக்ட் ஆஃப் ஹார்மோனைசிங் எலெக்டோரல் சைக்கிள்ஸ், எவிடென்ஸ் ஃப்ரம் இந்தியா’ என்ற ஆய்வுக் கட்டுரையின் அடிப்படையில் குழு முன்பு ஒரு விளக்கக்காட்சி அளிக்கப்பட்டது.

Tags: one nation one electionramnath govindDiscussFormer CJI U.U.Lalit
ShareTweetSendShare
Previous Post

கடத்தப்பட்ட ஈரானிய கப்பலை இந்திய போர்க்கப்பல் சுமித்ரா மீட்டது!

Next Post

மாலத்தீவு அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

Related News

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் எழுச்சி : முசாஃபராபாத் பேரணிக்கு அழைப்பு – சிறப்பு கட்டுரை!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் : ரயில்வே துறையில் பசுமைப் புரட்சி – சிறப்பு கட்டுரை!

500 இல்லை… இனி 100 சதவீதம் : ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்கா சலுகை, இந்தியாவிற்கு என்ன லாபம் ? – சிறப்பு கட்டுரை!

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் ஏன்? – சிறப்பு தொகுப்பு!

ஆடி மாத முதல் வெள்ளி – அம்மன் கோயில்களில் திரண்ட பக்தர்கள்!

நாட்டின் முதல் மற்றும் உலகின் நீண்ட தூர ஹைட்ரஜன் ரயில் சேவை – பிரதமர் தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கரூரில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் – இந்து அமைப்புகள் கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

“மேகாலயா பிராஜக்ட்” – 15 தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சித்தது அம்பலம்!

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பதிவுத்துறை டிஐஜி ஆனந்துக்கு பதவி உயர்வு வழங்க மறுத்தது சரிதான் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

பழனி கோவில் நில பதிவு விவகாரம் – சிபிசிஐடி விசாரணை தீவிரம்!

நாகர்கோவில் சபரி வர்மன் உயிரிழந்த விவகாரம் – தென்தாமரைக்குளம் எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்!

ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் – முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை!

ஹைட்ரஜன் ரயில்கள் கொண்ட ஒருசில நாடுகளில் இந்தியாவும் இணைகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் – இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies