"ஒரே நாடு ஒரே தேர்தல்": முன்னாள் தலைமை நீதிபதியுடன் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை!
Jun 18, 2026, 03:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“ஒரே நாடு ஒரே தேர்தல்”: முன்னாள் தலைமை நீதிபதியுடன் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 29, 2024, 05:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முன்னாள் தலைமை நீதிபதி உள்ளிட்ட சிலருடன் உயர்மட்டக் குழுவின் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவில் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

இக்குழுவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், மாநிலங்களவை முன்னாள் எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதிக் கமிஷனின் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் சி.காஷ்யம், முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி, மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

இக்குழுவினர் ஏற்கெனவே 3 முறை கூடி ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதித்தது. மேலும், சட்ட வல்லுனர்களுடனும் கலந்தாலோசித்தது. இந்த சூழலில், “ஒரே நாடு ஒரே தேர்தல்” உயர்நிலைக் குழுவின் தலைவர் ராம்நாத் கோவிந்த், புதுடெல்லியில் இந்திய முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த விஷயம் தொடர்பாக, அவர்கள் ஆலோசனைகளை வழங்கியதாக சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், அரசியல் கட்சித் தலைவர்களுடன் தனது கலந்துரையாடலைத் தொடர்ந்த ராம்நாத் கோவிந்த், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் தலைவர் தீபக் பாண்டுரங் தவாலிகருடனும் கலந்துரையாடினார்.

மேலும், உயர்நிலைக் குழுவின் 4-வது கூட்டமும் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநிலங்களவை முன்னாள் எதிர்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதிக் கமிஷன் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் பொதுச்செயலாளர் டாக்டர். சுபாஷ் சி. காஷ்யப், முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி, மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, என்.கே சிங் மற்றும் பிராச்சி மிஸ்ரா இணைந்து எழுதிய ‘தேர்தல் சுழற்சிகளின் மேக்ரோ எகனாமிக் இம்பாக்ட் ஆஃப் ஹார்மோனைசிங் எலெக்டோரல் சைக்கிள்ஸ், எவிடென்ஸ் ஃப்ரம் இந்தியா’ என்ற ஆய்வுக் கட்டுரையின் அடிப்படையில் குழு முன்பு ஒரு விளக்கக்காட்சி அளிக்கப்பட்டது.

Tags: one nation one electionramnath govindDiscussFormer CJI U.U.Lalit
ShareTweetSendShare
Previous Post

கடத்தப்பட்ட ஈரானிய கப்பலை இந்திய போர்க்கப்பல் சுமித்ரா மீட்டது!

Next Post

மாலத்தீவு அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

Related News

ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடர்; முக்கிய அறிவிப்புகள் இடம்பெறுமா ?

உலகின் இருபெரும் தலைவர்கள் சந்திப்பு; பிரதமர் மோடியின் முக்கிய அறிவுறுத்தல்

இரு அவைகளிலும் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை : பாஜகவின் அரசியல் ஆட்டம் : அச்சத்தில் எதிர்க்கட்சிகள் – சிறப்பு தொகுப்பு!

தற்போது நிலையில் இடைத்தேர்தலுக்கு என்ன அவசியம்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

வங்கதேசத்தில் ஸ்ரீராமர் அவமதிக்கப்பட்ட விவகாரம் – தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்துக்கள்!

101 நாட்களுக்கு பின்னர் மானாமதுரை ஆகாஷ் உடல் தகனம் – நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – அறநிலையத்துறை எச்சரிக்கை!

மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசல் விநியோகத்தில் முறைகேடு – அமைச்சர் ஸ்ரீநாத் ஆய்வில் கண்டுபிடிப்பு!

புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம் – 3 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு!

தனிநபர்களுக்கான கடன் சுமை ரூ.1,28,934 ஆக உயர்வு – வெள்ளை அறிக்கையில் தகவல்!

இன்றைய தங்கம் விலை!

நீட் மறுதேர்வு – வரும் 22ஆம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலி பயன்படுத்த தடை!

டெல்லியில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் – பாகிஸ்தான் ஆதரவு பெற்ற 7 பயங்கரவாதிகள் கைது!

குழந்தைகள், பெண்களுக்கு எதிராக அவதூறு – திருச்சி சூர்யா, முக்தார் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

பலத்த பாதுகாப்புடன் ராணுவ விமானத்தில் மதுரை வந்த நீட் மறு தேர்வு வினாத்தாள்!

தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் 13.18 லட்சம் கோடி – வெள்ளை அறிக்கையில் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies