"ஒரே நாடு ஒரே தேர்தல்": முன்னாள் தலைமை நீதிபதியுடன் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை!
Sep 16, 2026, 04:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“ஒரே நாடு ஒரே தேர்தல்”: முன்னாள் தலைமை நீதிபதியுடன் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 29, 2024, 05:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முன்னாள் தலைமை நீதிபதி உள்ளிட்ட சிலருடன் உயர்மட்டக் குழுவின் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவில் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

இக்குழுவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், மாநிலங்களவை முன்னாள் எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதிக் கமிஷனின் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் சி.காஷ்யம், முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி, மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

இக்குழுவினர் ஏற்கெனவே 3 முறை கூடி ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதித்தது. மேலும், சட்ட வல்லுனர்களுடனும் கலந்தாலோசித்தது. இந்த சூழலில், “ஒரே நாடு ஒரே தேர்தல்” உயர்நிலைக் குழுவின் தலைவர் ராம்நாத் கோவிந்த், புதுடெல்லியில் இந்திய முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த விஷயம் தொடர்பாக, அவர்கள் ஆலோசனைகளை வழங்கியதாக சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், அரசியல் கட்சித் தலைவர்களுடன் தனது கலந்துரையாடலைத் தொடர்ந்த ராம்நாத் கோவிந்த், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் தலைவர் தீபக் பாண்டுரங் தவாலிகருடனும் கலந்துரையாடினார்.

மேலும், உயர்நிலைக் குழுவின் 4-வது கூட்டமும் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநிலங்களவை முன்னாள் எதிர்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதிக் கமிஷன் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் பொதுச்செயலாளர் டாக்டர். சுபாஷ் சி. காஷ்யப், முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி, மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, என்.கே சிங் மற்றும் பிராச்சி மிஸ்ரா இணைந்து எழுதிய ‘தேர்தல் சுழற்சிகளின் மேக்ரோ எகனாமிக் இம்பாக்ட் ஆஃப் ஹார்மோனைசிங் எலெக்டோரல் சைக்கிள்ஸ், எவிடென்ஸ் ஃப்ரம் இந்தியா’ என்ற ஆய்வுக் கட்டுரையின் அடிப்படையில் குழு முன்பு ஒரு விளக்கக்காட்சி அளிக்கப்பட்டது.

Tags: one nation one electionramnath govindDiscussFormer CJI U.U.Lalit
Share
Tweet
SendShare
Previous Post

கடத்தப்பட்ட ஈரானிய கப்பலை இந்திய போர்க்கப்பல் சுமித்ரா மீட்டது!

Next Post

மாலத்தீவு அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

Related News

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

மதுராந்தகம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் பரந்தாமன் – திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை!

ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் தானாக ரத்தாகும் விவகாரம் – பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக மோதல் – அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்!

செங்கம் அருகே சுங்கச்சாவடியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் ரகளை : பேருந்துகளை குறுக்கே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு!

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு : ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

மசூத் அஸார் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி உயர்வு – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

விநாயகரை அவமதித்த தவெகவினரை கைது செய்க – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

முழு பயன்பாட்டுக்கு வந்தது 2,843 கி.மீ., நீள பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம்!

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா – 12 கோபுரங்களுக்கு பிரம்மாண்ட மாலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் – இபிஎஸ் நம்பிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies