"ஒரே நாடு ஒரே தேர்தல்": முன்னாள் தலைமை நீதிபதியுடன் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை!
May 20, 2025, 02:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“ஒரே நாடு ஒரே தேர்தல்”: முன்னாள் தலைமை நீதிபதியுடன் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை!

Web Desk by Web Desk
Jan 29, 2024, 05:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முன்னாள் தலைமை நீதிபதி உள்ளிட்ட சிலருடன் உயர்மட்டக் குழுவின் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவில் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

இக்குழுவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், மாநிலங்களவை முன்னாள் எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதிக் கமிஷனின் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் சி.காஷ்யம், முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி, மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

இக்குழுவினர் ஏற்கெனவே 3 முறை கூடி ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதித்தது. மேலும், சட்ட வல்லுனர்களுடனும் கலந்தாலோசித்தது. இந்த சூழலில், “ஒரே நாடு ஒரே தேர்தல்” உயர்நிலைக் குழுவின் தலைவர் ராம்நாத் கோவிந்த், புதுடெல்லியில் இந்திய முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த விஷயம் தொடர்பாக, அவர்கள் ஆலோசனைகளை வழங்கியதாக சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், அரசியல் கட்சித் தலைவர்களுடன் தனது கலந்துரையாடலைத் தொடர்ந்த ராம்நாத் கோவிந்த், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் தலைவர் தீபக் பாண்டுரங் தவாலிகருடனும் கலந்துரையாடினார்.

மேலும், உயர்நிலைக் குழுவின் 4-வது கூட்டமும் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநிலங்களவை முன்னாள் எதிர்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதிக் கமிஷன் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் பொதுச்செயலாளர் டாக்டர். சுபாஷ் சி. காஷ்யப், முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி, மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, என்.கே சிங் மற்றும் பிராச்சி மிஸ்ரா இணைந்து எழுதிய ‘தேர்தல் சுழற்சிகளின் மேக்ரோ எகனாமிக் இம்பாக்ட் ஆஃப் ஹார்மோனைசிங் எலெக்டோரல் சைக்கிள்ஸ், எவிடென்ஸ் ஃப்ரம் இந்தியா’ என்ற ஆய்வுக் கட்டுரையின் அடிப்படையில் குழு முன்பு ஒரு விளக்கக்காட்சி அளிக்கப்பட்டது.

Tags: one nation one electionramnath govindDiscussFormer CJI U.U.Lalit
ShareTweetSendShare
Previous Post

கடத்தப்பட்ட ஈரானிய கப்பலை இந்திய போர்க்கப்பல் சுமித்ரா மீட்டது!

Next Post

ஜனாதிபதி, கவர்னர் உரையின்போது குறுக்கிடக் கூடாது: சபாநாயகர் ஓம்பிர்லா!

Related News

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!

தண்ணீரை நிறுத்தாதீங்க : இந்தியாவிடம் கெஞ்சும் – பாகிஸ்தான் அரசு!

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

பாகிஸ்தானுக்கு உளவு : துரோகிகளாக மாறிய இன்ஃப்ளூயன்சர்கள்!

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் : அண்ணாமலை  வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 5-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழகத்தை கடன் சுமையில் தத்தளிக்க விட்டதுதான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் கனமழை : வீடுகளுக்குள் சிக்கித் தவித்த மக்கள் – ரப்பர் படகு மூலம் மீட்பு!

முல்லை பெரியாறு வழக்கு : உச்ச நீதிமன்றம் ஆணை!

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies