நாடாளுமன்ற தேர்தல் : ஜே.பி.நட்டா தலைமையில் ஆலோசனை கூட்டம்!
Jul 31, 2026, 02:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் : ஜே.பி.நட்டா தலைமையில் ஆலோசனை கூட்டம்!

இன்று இரவு நடைபெறும் கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர்கள் பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Jan 30, 2024, 05:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் அக்கட்சியின் தேசிய  பொதுச்செயலாளர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. குறிப்பாக வரும் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் 3-வது முறையாக பாஜக ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள்  தெரிவிக்கின்றன.

தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிர முன்னேற்பாட்டு  பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பூத் கமிட்டி அமைப்பு, கூட்டணி குறித்த  பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளில் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் அவரது இல்லத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.  இதில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.

பாஜக பிப்ரவரி 4 முதல் 11 வரை  ‘காவ் சலோ அபியான் இயக்கத்தை நடத்தவுள்ளது.
இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பாஜக தொண்டர்கள் சொந்த மாவட்டங்களில்  இருந்து வெளி மாவட்டங்களுக்கு தேர்தல் பணிகளுக்கு அனுப்பப்படவுள்ளனர். சுமார் 7  லட்சம் கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள அனைத்து சாவடிகளிலும் 24  மணிநேரமும் அவர்கள் செலவழிக்க பணிக்கப்படுவார்கள்.

பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் தொண்டர்களை’பிரவாசி காரியகர்த்தா’ என,  கட்சி மேலிடம் அழைக்கிறது. மத்தியிலும்  மற்றும் ஆட்சியில் உள்ள மாநிலங்களிலும்  பாஜகவின் வளர்ச்சிப் பணிகளை சுட்டிக்காட்டி, பொதுமக்களின் நம்பிக்கையைப்  பெறுவதற்கு உதவும் பணி இந்த காரியகர்த்தாக்களிடம் ஒப்படைக்கப்படும்.

அவர்கள் எடுக்கும் முயற்சிகள், பாஜகவுக்கு மக்களுடனான தனது ஈடுபாட்டை  ஆழப்படுத்தவும், முக்கியமான பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அவர்களின்  நம்பிக்கையையும்,  ஆதரவையும் பெறவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Gaao Chalo Abhiyanbjpbjp naddaparliment electionLok Sabha elections.BJP National President
ShareTweetSendShare
Previous Post

மகாத்மா காந்திஜியின் அமைதி மற்றும் நல்லிணக்கச் செய்திகள் இன்றைக்கும் பொருந்தும்! – அமித் ஷா

Next Post

சக ஆசிரியர்களைச் சுட்டுக் கொன்ற ஆசிரியர்! – ஜார்கண்டில் அதிர்ச்சி!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies