இந்திய செஸ் வீராங்கனை திவ்யா குற்றசாட்டு : அமெரிக்க செஸ் வீராங்கனை திடீர் பதிவு!
Sep 13, 2026, 01:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய செஸ் வீராங்கனை திவ்யா குற்றசாட்டு : அமெரிக்க செஸ் வீராங்கனை திடீர் பதிவு!

Murugesan M by Murugesan M
Feb 2, 2024, 06:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செஸ் வீராங்கனை திவ்யா தேஷ்முக்கின் போட்டியின் போது பெண்கள் எப்படி நடந்த படுகிறார்கள் என்பதை பற்றி பதிவினை வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து ஹங்கேரிய அமெரிக்க செஸ் வீராங்கனையான சுஷான் போல்கர் தனது அனுபவத்தை குறித்து பதிவை ஒன்றை பகிர்ந்துள்ளார்.

டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் போட்டி நெதர்லாந்து நாட்டின் விஜ்க் ஆன் ஜியில் நடந்தது. இதில் பங்கேற்ற இந்தியர்களில் ஒருவரான 18 வயது வீராங்கனை திவ்யா தேஷ்முக் 4.5 புள்ளிகளுடன் 12-வது இடத்தை பெற்றார்.

மராட்டியத்தை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு ஆசிய பெண்கள் சாம்பியன்ஷிப்பை வென்றார். இந்த நிலையில் நெதர்லாந்து செஸ் போட்டியில் பார்வையாளர்கள் பெண் போட்டியாளர்கள் நடத்தப்படும் விதம் குறித்து தனது வேதனை தெரிவித்திருந்தார்.

இது குறித்து திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ” செஸ் போட்டியில் வீராங்கனைகள் எப்படி பார்வையாளர்களால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள் என்பதை சொல்ல விரும்புகிறேன்.

நெதர்லாந்து செஸ் போட்டியில் அதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன். இந்த தொடரில் சில போட்டிகளில் நான் சில முக்கிய நகர்வுகளை செய்ததும், போட்டி நன்றாக சென்று கொண்டிருப்பதாக நினைத்தேன். அதை நினைத்து பெருமையும் பட்டேன்.

ஆனால் பார்வையாளர்கள் அதை பற்றி கவனத்தில் கொள்ளவில்லை. மாறாக எனது உடை, முடி, எனது உச்சரிப்பு உள்ளிட்ட போட்டிக்கு தேவையில்லாத மற்ற விஷயங்களையே கவனித்தனர். இதனால் நான் மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

செஸ் போட்டியின் போது, பெண்கள் எப்படி விளையாடுகிறார்கள், அவர்களின் பலம் என்ன? என்பதை பெரும்பாலும் யாரும் கவனிப்பதில்லை என்பதே சோகமான உண்மை.

மேலும் எனது நேர்காணல்களின் போது, பார்வையாளர்கள் போட்டியை தவிர மற்ற அனைத்து விஷயங்கள் குறித்து விவாதிப்பதை பார்த்து ஏமாற்றமடைந்தேன். மிகச்சிலரே எனது ஆட்டம் குறித்து கேட்டனர்.

அதே சமயம் நேர்காணலுக்கு வீரர்கள் சென்றால், அவர்களின் தனிப்பட்ட விஷயம் குறித்து கேள்வி என்பது மிக குறைந்த அளவிலேயே இருக்கும்.

பொதுவாகவே வீராங்கனைகள் குறைவாக மதிக்கப்படுகிறார்கள். இந்த நிலைமை மாற வேண்டும். பெண்களுக்கு சரிசமமான மரியாதை கிடைக்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து ஹங்கேரிய – அமெரிக்க செஸ் வீராங்கனையான சுஷான் போல்கர், திவ்யா தேஷ்முக்கின் பதிவினை படித்த பின் 10 ஆண்டுகளுக்கு முன் தான் எழுதிய கட்டுரையைப் பகிர்ந்துள்ளார்.

Why I chose to look ugly, and the reasoning behind it!

I read what @DivyaDeshmukh05 wrote about her recent horrible experience. It is absolutely terrible. Here is an article I wrote more than a decade ago about similar things I experienced:

When I was a young chess player, I… pic.twitter.com/jVP2W5hcb4

— Susan Polgar (@SusanPolgar) January 29, 2024

அதில் , “நான் இளம் செஸ் வீராங்கனையாக இருந்த போது முடிந்தவரை அழகற்றதாக இருக்க விரும்பினேன். எனது 20 வயதுவரை நான் மேக்கப்பைத் தொடவே இல்லை. ஏன் என பெரும்பாலானோர் அறிந்திருக்கமாட்டார்கள். நான் அதைப் பற்றி பேசவில்லை. உண்மையில் 2 விஷயங்கள் இருந்தன.

ஆல் மென் செஸ் போட்டிகளில் அப்போது நான் மட்டுமே பெண். நான் அந்த நேரத்தில் ஆண்களுக்கு எதிராக மட்டுமே விளையாடுவதை நான் தேர்ந்தெடுத்ததற்காக எனது நம்பர் 1 (உலக) தரவரிசையை நீக்கி FIDE என்னை கடுமையாக தண்டித்தது.

ஆண் செஸ் வீரர்களில் நடத்தைகள் உண்மையில் பயங்கரமானது. நான் பல சமயங்களில் உயிருக்கு பயந்தேன். சிலர் என்னை உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் தாக்க முயன்றனர்.

நான் போட்டியில் என்னை நிரூபிக்க முயன்றேன். எனது தோற்றத்தை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் கவலை கொள்ளவில்லை. எனது குடும்பத்தார் போட்டிகளின் போது எப்போதும் என்னுடன் இருந்து என்னைப் பாதுகாக்க முயற்சித்ததற்கு நான் நன்றியுள்ளவகாக இருந்தேன்.

இப்போது அதுபோன்ற விஷயங்கள் மாறியிருந்தாலும் அப்போது மோசமாக இருந்தது. இரண்டாவதாக நாங்கள் மிகவும் ஏழ்மையாக இருந்தோம். ஆடம்பரமான ஆடைகளுக்கு என்னிடம் பணம் இல்லை.

என் முழுவாழ்க்கையாவும் அர்ப்பணித்த, நான் நேசிக்கும் விளையாட்டில் உள்ள உண்மைகள் மற்றும் பிரச்சனைகளை அம்பலப்படுத்தியதற்காக நான் இன்றும் பலரால் தடுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.

Tags: chess gamechess player
Share
Tweet
SendShare
Previous Post

26-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம்! – திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த ஜாக்டோ – ஜியோ!

Next Post

இந்தியா – இங்கிலாந்து 2வது டெஸ்ட் : முதல் நாள் முடிவு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies