30 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இருந்த தேர்வு மோசடி தடுப்பு சட்டம்!
Sep 13, 2026, 03:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

30 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இருந்த தேர்வு மோசடி தடுப்பு சட்டம்!

Murugesan M by Murugesan M
Feb 6, 2024, 06:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேர்வில் மோசடி செய்வதை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட மோசடி தடுப்புச் சட்டம் 1992 ஆம் ஆண்டே இந்தியாவில் இருந்தது.

பாராளுமன்றத்தில் நேற்று பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் பொதுத்தேர்வு மற்றும் நுழைவு தேர்வுகளில் முறைகேடு செய்வோருக்கு ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார். யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே உள்ளிட்ட அரசு பொதுத் தேர்வுகளின் வினாத் தாள்களை கசிய விடுவோருக்கும் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபடுவோருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்க சட்டம் கொண்டு வராதே இந்த மசோதா ஆகும்.

இந்த மசோதா அமல்படுத்தப்பட்டு சட்டமானால், முறைகேடுகள் பெருமளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த சட்டம் 30 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 1992 ஆம் ஆண்டு உத்திர பிரதேசத்தில் கல்யாண் சிங் தலைமையிலான அரசு மோசடி தடுப்புச் சட்டத்தை கொண்டு வந்தது.

கல்யாண் சிங் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் இந்த அவசரச் சட்டத்தை முன்மொழிந்தார்.

பள்ளி மற்றும் பல்கலைக் கழகங்களில் பெருமளவில் மோசடி செய்வதை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட மோசடி தடுப்புச் சட்டம் 1992 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

இந்த மோசடி குற்றத்தால் சிறைக்கு செல்லும் மாணவர்கள் ஜாமினில் கூட வெளிவர முடியாத அளவுக்கு இந்த சட்டம் அப்போது கடுமையாக இருந்தது.

1992 ஆம் ஆண்டு சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு தேர்வெழுதிய 12 ஆம் வகுப்பு மாணவர்களில் 14 சதவிகிதம் மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 30 சதவிகிதம் மாணவர்கள் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சில மாணவர்கள் மோசடியில் சிக்கி சிறைக்கு அனுப்பப்பட்டனர். இது அந்த சமயத்தில் மக்களிடையே பெரும் சலசலப்பைத் தூண்டியது, இதை எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டனர்.

பின்னர் இந்த சட்டம் தற்போது கொண்டு வர திட்டமிட்டுவருகிறது.

Tags: 30 years ago in India's exam fraud prevention law!
Share
Tweet
SendShare
Previous Post

பட்டாசு ஆலையில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

Next Post

அவதார் 6 மற்றும் 7-ஆம் பாகம் பற்றி பேசிய ஜேம்ஸ் கேமரூன் !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies