அமைச்சர் சேகர் பாபு சொல்வது பொய் - இந்து முன்னணி கடும் தாக்கு!
Jun 15, 2026, 02:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் சேகர் பாபு சொல்வது பொய் – இந்து முன்னணி கடும் தாக்கு!

Murugesan M by Murugesan M
Feb 10, 2024, 05:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தீயெரிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்து முன்னணி இதுதான் திராவிட மாடல் கோவிலை காக்கும் லட்சணமா? என  கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தீயெரிப்புச் சம்பவம் நடைபெற்றது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அது வேலை செய்வதில்லை. தீ எரிப்பு சம்பவம் நடைபெற்ற பிறகு காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்த போது சி சி டிவி கேமராக்கள் பழுதாகி இருந்தது தெரிய வந்தது. மிகப்பெரிய தொன்மை வாய்ந்த இந்தக் கோவிலில் காவலாளி கூட நியமிக்கவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இதே கோவிலில் ஒரு வாரத்திற்கு முன்பாக இரண்டு வாலிபர்கள் ஆபாச பாடலுக்குக் குத்து நடனம் ஆடினர். இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பே நடந்தது இந்த அநாகரிகம். பக்தர்களின் எதிர்ப்பு வந்த பிறகு நிர்வாகம் மன்னிப்பு கேட்டது. காவல்துறையில் புகார் அளித்துள்ளது.

கபாலீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நாமாவளி பாடக்கூடாது என்று அறநிலையத்த்துறை ஆணையரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இத்தகைய அட்டூழியம் வேற்று மத வழிபாட்டு இடங்களில் அதிகாரிகளால் நடந்திருந்தால் விஷயம் விபரீதமாகியிருக்கும்.

சில நாட்களுக்கு முன்பு இதே கோவிலில் முஸ்லிம்கள் உள்ளே சென்று செல்போனில் வீடியோ எடுத்ததும் சர்ச்சையாகியது. இஸ்லாமிய மொகரம் ஊர்வலத்தின் போது முஸ்லிம்கள் தங்களைத் தாங்களே வெட்டிக் கொண்ட ஆயுதங்களைக் கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் கழுவ அனுமதித்து அசுத்தம் படுத்துகின்றனர்.

இதையெல்லாம் கேட்க திராணியில்லாத அறநிலையத்துறை, கோவிலை காக்க குரல் கொடுத்து வரும் முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் பக்தர்களோடு கோவில் மண்டபத்தில் அமர்ந்து பேசக்கூடாது என்று கோவில் நிர்வாகம் தடை செய்திருக்கிறது. இப்படி தொடர்ந்து மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

இதையெல்லாம் சரி செய்யாத அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திராவிட மாடல் ஆட்சியில் தவறுகள் நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறுவது நகைப்பிற்குரிய செய்தியாகவே தோன்றுகிறது.

தமிழகத்தில் இந்த மூன்றாண்டு காலத் திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு கோவில்களில் பல்வேறு விதமான அசம்பாவித சம்பவங்கள் நடந்தேறி உள்ளன.

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மின்சாரம் தாக்கி மதுரையைச் சேர்ந்த பிரசாத் என்ற இளைஞர் உயிரிழந்தார். அந்த இளைஞரின் குடும்பத்திற்குத் தமிழக அரசு இதுவரை எந்த நிவாரணமும் வழங்கவில்லை.

சூரசம்காரம் விழாவின்போது சிறப்பு தரிசனத்திற்காக 2000 ரூபாய் வசூலித்தது கோவில் நிர்வாகம். இதை இந்து முன்னணியினர் தட்டி கேட்டனர். பிறகு பக்தர்கள் இதைத் தட்டி கேட்ட பொழுது மிரட்டப்பட்டனர். திருச்செந்தூர் முருகனுக்குப் பால்காவடி எடுத்து வரும் பக்தர்களைத் தடுத்து நிறுத்தி பால் காவடிகளைக் கீழே ஊற்றி அசிங்கப்படுத்தினர். பால் காவடி எடுத்து வந்த பல பக்தர்கள் கண்ணீரோடு புலம்பி நின்றதை யாரும் மறந்திருக்க முடியாது.

ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் கோவில் பணியாளர்களால் தாக்கப்பட்டார். இதற்கு நியாயம் கேட்க மக்கள் திரண்டனர். தாக்கப்பட்ட பக்தர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்து அச்சப்படுத்தி வெளியேற்றியது. இதே போல ராமேஸ்வரம் கோவிலிலும் பக்தர்கள் தாக்கப்பட்டனர்.

கடந்த வாரத்தில் தைப்பூசம் நிகழ்ச்சிக்காகப் பழனிக்கு வந்த எடப்பாடியைச் சேர்ந்த பக்தர் ஒருவரை கோவில் பணியாளர்கள் என்ற பெயரில் குண்டர்கள் அரை நிர்வாணமாக்கி தாக்கினர். பக்தர்கள் வெளியே வந்து கோவில் நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியபோது காவல்துறையினர் பக்தர்களை மிரட்டிய சம்பவம் நடந்தது. அறநிலையத்துறையின் நிர்வாகச் சீர்கேட்டையும் ரவுடித்தனத்தையும் இது தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.

ஸ்ரீவில்லிபுதூர் கோவிலில் இரண்டு கல்யானை சிலைகளும் இரண்டு கொடி மரங்களும் காணாமல் போனது. இவைகள் திருட்டுப் போய் ஆறு மாதம் கழித்து அறநிலையத்துறை அலுவலரால் காவல் நிலையத்தில் புகார் தரப்படுகிறது.

தற்போது, சென்னை திருவேற்காடு அம்மன் தாலியை இந்து சமய அறநிலையத்துறையால் தற்காலிக அர்ச்சகராக நியமிக்கப்பட்டவர் திருடி அடகு வைத்த செய்தி வெளியாகி இருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பலர் மீது சிலை கடத்தல் முதல் பல கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான அந்த அதிகாரிகள் இன்று தி.மு.க அரசின் தயவால் அதிகார பீடத்தில் அமர்ந்து உள்ளனர்.

பழனி மலையில் மேளதாளங்கள் முழங்கி வரக்கூடாது என்று செயல் அலுவலர் லட்சுமி அவர்கள் உத்தரவிடுகிறார். ஆண்டாண்டு காலம் பக்தர்களின் பராம்பரிய வழக்கமான மேளதாளத்தைத் தடை செய்வது தான் திராவிட மடல் அரசின் சாதனையா?

திருவள்ளூர் மாவட்டம் அருள்மிகு சிறுவாபுரி முருகன் கோவிலில் சுவாமியை தரிசனம் செய்யப் பக்தர்களுக்குத் தடை விதித்துள்ளார் செயல் அலுவலர் விஜயா. வெறும் பிரகாரத்தை மட்டுமே சுற்றி சுவாமியை தூரமாக நின்று தரிசனம் செய்யப் பக்தர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் கோவிலுக்கு வேண்டுதலுக்காக வரும் பக்தர்கள் மன வேதனையோடு செல்கின்றனர்.

இப்படி, தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாகக் கடவுள் நம்பிக்கை இல்லாத திராவிட மாடல் ஆட்சியால் கோவில்கள் சீரழிக்கப்படுகிறது. பக்தர்கள் பயமுறுத்தப்படுகிறார்கள். மக்கள் அவமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் தவறுகள் எங்கே நடந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு கூறியிருப்பது வடிகட்டிய பொய்.

இனியாவது, அறநிலையத்துறை வசம் உள்ள தமிழகக் கோவில்களைப் பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்களைத் தாக்கப்படுகின்ற போக்கினை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: kadeswara subramaniamMylapore Kapaleeswarar templeDravidian modelminister saker babu
ShareTweetSendShare
Previous Post

நாளை சென்னை வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா – அண்ணாமலை தகவல்!

Next Post

சிரஞ்சீவிக்கு பரிசளித்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies