புதிய குற்றவியல் சட்டத்தை விளக்க கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு!
Apr 29, 2026, 10:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய குற்றவியல் சட்டத்தை விளக்க கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு!

Murugesan M by Murugesan M
Feb 21, 2024, 11:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை மாணவர்களிடையே பிரபலப்படுத்தவும், இவை தொடர்பான பொய் பிரசாரம் குறித்து விளக்கம் அளிக்கவும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு பல்கலை மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.

பிரிட்டிஷ் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக, புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் நிறைவேறிய இது தொடர்பான மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த சட்டங்களை மாணவர்களிடையே பிரபலப்படுத்தும்படி, உயர்கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து, யு.ஜி.சி., செயலர் மணீஷ் ஜோஷி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ” புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, ‘பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷய சன்ஹிதா’ ஆகிய மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்து மாணவர்களிடையே பிரபலப்படுத்த வேண்டும்.

இது தொடர்பாக சுவரொட்டிகள், கையேடுகளை வழங்க வேண்டும். மேலும், மாணவர்கள் எளிதில் பார்க்கும் இடத்தில் இந்த சட்டம் தொடர்பான விளக்கங்களை காட்சிப்படுத்த வேண்டும்.

தற்போது பணியாற்றும் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை வரவழைத்து கருத்தரங்குகள், கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

குறிப்பாக இந்த சட்டம் தொடர்பாக பரவியுள்ள சில கட்டுக்கதைகள், பொய் பரப்புரைகளை உடைத்தெறியும் வகையில், விளக்கங்களையும் அளிக்க வேண்டும். இந்த சட்டங்கள், தனிமனித சுதந்திரத்துக்கு எதிராக உள்ளது.

போலீசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேச விரோத பிரிவு நீக்கப்பட்டு, மிகக் கடுமையான தேசதுரோக பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது என, பல பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இவை குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags: Ugcugc warns
ShareTweetSendShare
Previous Post

கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Next Post

பழங்குடியினரின் மிகப்பெரிய பண்டிகையான சம்மக்கா – சரக்கா மேதரம் ஜாத்ரா தொடங்கியுள்ளதையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies