இந்திய அணியின் இளம் வீரர் துருவ் ஜூரெல் : யார் இவர் ?
Apr 29, 2026, 12:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய அணியின் இளம் வீரர் துருவ் ஜூரெல் : யார் இவர் ?

Murugesan M by Murugesan M
Feb 21, 2024, 03:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய வீரர் துருவ் ஜூரெல் குறித்து பார்போம்.

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் நான்காவது போட்டி வரும் 23ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் நடந்து முடிந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இரண்டு வீரர்கள் தங்கள் அறிமுக ஆட்டத்தில் ஆடினார்.

இதில் சர்ப்ராஸ் கான் – துருவ் ஜூரெல் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர். இந்தப் போட்டியில் சர்ப்ராஸ் கான் முதல் இன்னிங்சில் 62 ரன்களை எடுத்து அறிமுக ஆட்டத்தில் அதிவேக அரைசதம் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இரண்டாவது இன்னிங்சில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் துருவ் ஜூரெல் முதல் இன்னிங்சில் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார்.

இருப்பினும் இவர் தனது அறிமுக போட்டியில் சிறப்பாக விளையாட்டி தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டார். ஆனால் அனைவரும் சர்ப்ராஸ் கான் பற்றி பேசினார்களே தவிர துருவ் ஜூரெல் பற்றி பேசவில்லை.

யார் இந்த துருவ் ஜூரெல் ?

உத்தர பிரதேச மாநில கிரிக்கெட் வீரரான துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். இவரின் தந்தை 1999 ஆம் நடந்த கார்கில் போரில் ஆயுதப்படையில் ஒருவராக இருந்தார்.

துருவ் ஜூரெலின் கிரிக்கெட் பயணத்திற்கு அவரது குடும்பத்தினர் பல தியாகங்களை செய்துள்ளனர். அவரது கிரிக்கெட் கிட் வாங்குவதற்கு கூட அவரது அம்மா, தனது தங்கச் சங்கிலியை விற்றுக் கொடுத்துள்ளார்.

ஜூரெல் கிரிக்கெட் விளையாடுவதை அவரது தந்தை முதலில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதன் பிறகு அவருக்கு ஆதரவு கொடுத்துள்ளார்.

இவர் தனது 13 வயதில் கிரிக்கெட் விளையாடுவதற்காக தனது வீட்டை விட்டு வெளியே ஆக்ராவில் இருந்து தேசிய தலைநகர் மண்டலம் ( NCR ) வரை சென்றார்.

அங்கு தங்குவதற்கு இடம் இல்லாமல் கஷ்டப்பட்ட இவரின் திறமையை கண்டு கிரிக்கெட் பயிற்சியாளர் இவருக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார்.

பின்னர் இவர் அண்டர் 19 தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்டார். கடந்த 2023 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய துருவ் ஜுரேல் இம்பாக்ட் பிளேயராக சில போட்டிகளில் அதிரடி ஆட்டம் ஆடி கவனம் ஈர்த்தார். அதன் பின் பெரிய சத்தம் இன்றி இருந்த நிலையில் அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

அண்டர் 19 அணியில் இருந்தே துருவ் ஜுரேல் மீது பிசிசிஐ தேர்வுக் குழு ஒரு கண் வைத்து இருந்தது. பின்னர் ஐபிஎல் செயல்பாடுகளால் ஈர்த்தவர், தொடர்ந்து ரஞ்சி ட்ராபி, விஜய் ஹசாரே ட்ராபி போன்ற உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வந்ததை அடுத்து இந்திய டெஸ்ட் அணியில் மாற்று விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags: indian cricket teamDhruv Jurel is the young player of the Indian team
ShareTweetSendShare
Previous Post

மியான்மரில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவு!

Next Post

அமைதி, முன்னேற்றம் மற்றும் நிலையான வளர்ச்சியின் தூதுவர்களாக மாணவர்கள் திகழ வேண்டும்! – குடியரசுத் துணைத் தலைவர் 

Related News

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies