பிரதமர் மோடி வருகைக்கு பின் தேசிய ஜனநாயக கூட்டணியின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் : பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி!
Jul 29, 2026, 04:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி வருகைக்கு பின் தேசிய ஜனநாயக கூட்டணியின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் : பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி!

Murugesan M by Murugesan M
Mar 2, 2024, 02:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் வருகைக்கு பின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் ஜி.கே வாசனை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பேச்சுவார்த்தைக்காக பாஜகவின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் இடம் பெற்றுள்ள பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் சந்தித்தனர்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே வாசன்,

தமிழக பாஜகவின் தேர்தல் குழுவில் இடம் பெற்றிருக்கும் பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் என்னையும் மாநில நிர்வாகிகள் மாவட்ட தலைவர்களலயும் சந்தித்து பேசினார்கள்.

முதல் சந்திப்பே ஆக்கப்பூர்வமான சந்திப்பாக அமைந்தது. தேர்தல் வெற்றி வியுகம் குறித்து பேசினோம்.

தொகுதி பங்கீடு குறித்து முறைப்படி பேச்சு வார்த்தை நடைபெறும் என என்னை சந்தித்த பாஜக தலைவர்கள் கூறியுள்ளார்கள். 4,5,6 ஆகிய தேதிகளில் தேர்தலில் போட்டியிட விரும்பும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் விருப்ப மனுக்களை அளிக்கலாம்.

இந்தியாவில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு மத்திய அரசின் சாதனைகள் மூலம் நிகழ இருக்கிறது. நாட்டின் நலன் கருதி தேசப்பற்றோடு கூடிய கட்சிகள் உடன் கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்பது எங்களது எண்ணம்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடரும் வகையில் மாநில கட்சிகள் செயல்பட வேண்டும்.

ஜிடிபி 8.4 என செய்தி வெளி வந்திருப்பது அனைத் துறைகளுக்கும் மகிழ்ச்சி அளிக்க கூடியது. அது இன்னும் தொடரும். இண்டி கூட்டணி முரண்பாட்டின் மொத்த உருவமாக இருக்கிறது. அதன் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் பொதை பொருள்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

போதை பொருளை தடுக்க முடியாத அரசுக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.‌ இரும்பு கரம் கொண்டு தவறு செய்பவர்களை அடக்க வேண்டும். மாநில கட்சியாக இருந்தாலும் தேசிய பார்வை கொண்ட கட்சி தமிழ் மாநில காங்கிரஸ்.

தேச பற்று மிக்கவர்கள் பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும். பாஜக ஆட்சிக்கு வருவதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரும் என்பது தமாகா கருத்து. வரும் 4 – ந் தேதி பிரதமர் கூட்டத்தில் தமாகாவினர் கலந்து கொண்டுள்ள உள்ளனர். 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்தாா்.

பேட்டியின் முடிவில் எத்தனை தொகுதிகள் பாஜகவிடம் கேட்க போகிறீர்கள் என்று பாஜகவின் கேள்விக்கு, எங்களுக்கு விருப்பமான தொகுதிகளின் எண்ணிக்கை 41, எனது ஆசை பாண்டிச்சேரியையும் தாண்டி இருக்கிறது என நகைச்சுவையாக தெரிவித்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணன்,

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைத்து பிரதமர் மோடி பிரதமராக வருவதற்கு தமிழகம் அதிக பங்களித்தாக இருக்க வேண்டும்.‌

கூட்டணி பற்றிய சுமுகமான முடிவு கூடிய விரைவில் வெளியாகும். பிரதமர் வருகைக்கு பின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் தேச பற்றுடன் தான் உள்ளது எனத் தெரிவித்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் உடன் இணைந்து பயணம் செய்வது பாஜகவிற்கு மிகப்பெரிய வெற்றியைப் தரும் எனத் தெரிவித்தார்.

Tags: GK vasanpon radhakrishnan bjp
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி ஸ்ரீ ராமரை தரிசனம் செய்தார் குஜராத் முதல்வர்!

Next Post

ஐபிஎல் : லக்னோ அணியில் புதிய துணை பயிற்சியாளர்!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies