லட்சத்தீவில் ஐஎன்எஸ் ஜடாயு புதிய தளம் : இந்திய கடற்படை அதிரடி! 
Apr 29, 2026, 11:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லட்சத்தீவில் ஐஎன்எஸ் ஜடாயு புதிய தளம் : இந்திய கடற்படை அதிரடி! 

Murugesan M by Murugesan M
Mar 3, 2024, 08:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தனது நிலையை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியக் கடற்படை, இலட்சத்தீவின் மினிகாய் தீவுகளில் ஐஎன்எஸ் ஜடாயு என்ற புதிய தளத்தை இயக்க உள்ளது. .

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் விக்ராந்த் உள்ளிட்ட இரட்டை விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் இந்திய கடற்படை தனது தளபதிகள் மாநாட்டை நடத்துகிறது.  அங்கு அவர்கள் ஒரு கேரியரில் இருந்து புறப்பட்டு மற்றொன்றில் தரையிறங்குவது போன்ற  நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

கொச்சியில் மல்டிரோல் ஹெலிகாப்டர் எம்எச்-60 ரோமியோவை முதல் முறையாக இந்திய கடற்படை இயக்க உள்ளது.கோவாவில் உள்ள அதன் கடற்படைப் போர்க் கல்லூரியின் கட்டிடங்கள் மற்றும் கார்வாரில் உள்ள வசதிகள் மார்ச் 4 ஆம் தேதி திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது மாலத்தீவில் இருந்து 50 மைல் தொலைவில் உள்ளதால், அப்பகுதியில் உள்ள எதிரிகளின் இராணுவ மற்றும் வணிக நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும்,  அப்பகுதியில்  காலூண்டறவும் உதவும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தளம் அந்தமானில் உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் பாஸைப் போலவே இருக்கும் என்றும், அதே திறன்களைக் கொண்டிருக்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும்  அமெரிக்காவில் வாங்கப்பட்ட  நான்கு எம்எச்-60 ரோமியோ மல்டிரோல்  ஹெலிகாப்டர்களையும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியக் கடற்படை முதன்முறையாக லட்சத்தீவுக்கு அருகிலுள்ள பகுதிகளில் இரட்டைக் கப்பலின் செயல்பாடுகளை நிரூபிக்கப்  போகிறது. ஐஎன்எஸ் விக்ராந்த்  அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, கடற்படை இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களின் செயல்பாடுகளை ஒன்றாகச் செய்வது இதுவே முதல் முறையாகும்.

விசாகப்பட்டினத்தில் நடந்த மிலின் என்ற பயிற்சியில், உலக ராணுவத்தினருக்காக விமானம் தாங்கி போர்க்கப்பல்களை தயாரிக்கும் இந்தியாவின் திறனை வெளிப்படுத்தும் வகையில் இரண்டு கேரியர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags: indian navyLakshadweepINS JatayuMinicoy Islands
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவுடன் நட்புறவைப் பேணுவதில் உலகம் கவனம் செலுத்துகிறது! –  மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா 

Next Post

அய்யா வைகுண்டரின் 192-ஆவது அவதார தினம் : அண்ணாமலை வாழ்த்து!

Related News

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies